புதுதில்லி,டிச.28- முதுகலை மருத்துவப் படிப்புக் கான கலந்தாய்வு நடத்தப்படாமல் இருப்பதைக் கண்டித்தும் கலந்தா ய்வை உடனே நடத்தக்கோரியும் காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்தும் தில்லியில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. அனைத்து இந்திய மருத்துவ அறி வியல் கழகம் உட்பட நகரின் பல மருத்துவமனைகளில் உள்ள குடி யுரிமை மருத்துவர்கள் சங்கங்கள் செவ்வாய்க்கிழமையன்று அவசர நிலை அல்லாத வார்டுகளில் பணி யை புறக்கணிக்க அழைப்புவிடுத் தன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரு த்துவர்கள் வெளியில் செல்வதை தடுக்கும் வகையில் சப்தர்ஜங் மருத்துவமனையின் அனைத்து மெயின் நுழைவு வாயில்களையும் காவல்துறையினர் மூடினர்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவந்துள்ள ஒன்றிய அரசு முடிவின் செல்லுபடியை ஆராயும் வரை நீட் கவுன்சிலிங் தொடங்காது என்று அக்டோபர் 25 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து நவம்பரில் போராட்டங்கள் தொடங்கின. திங்கள்கிழமையன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் வீட்டிற்குச் சென்ற 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சரோஜினி நகர் காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட, பலர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். மருத்து வர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதலைக் கண்டித்து அனைத்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் இன்று (புதன்கிழமை) போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சப்தர்ஜங் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் சேவை கள் சுருக்கமாக நிறுத்திவைக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் மதியம் நோயாளிகளை கவனிக்க ஆரம்பித்தனர். மருத்துவக் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை கால தாமதத்தால் மருத்துவமனைகளில் பணிச்சுமை அதிகரித்துள்ளது என்றும் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சேர்க்கை மேலும் தாமதமாவது கடுமையான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திங்களன்று மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரியிலிருந்து உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது காவல்துறை யினர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மருத்துவர்கள் பலர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். தடியடி நடத்தப்படவில்லை. 12 பேர் மட்டும் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது. மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.