பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் கடந்த செப்., 23 அன்று டாக்டர் கன்ஷ்யாம் திவாரி அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக ஆதரவு நபரான அஜய் நாராயண் சிங் தலைமறைவானார். அவரை கைது செய்ய வலியுறுத்தி, அக்.1 அன்று உத்தரப்பிரதேசத்தின் கர்சோமாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, டாக்டர் கன்ஷ்யாம் திவாரியின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.