“அரசியல் சட்டத் தின் 167-வது பிரிவின் படி, ஆளுநருக்கு தக வல் அளிக்க வேண்டி யது முதல்வரின் கடமை. ஆனால், நான் எழுப்பிய பல பிரச்ச னைகளுக்கு நீண்ட கால மாக நீங்கள் பதில் அளிக்கவில்லை. ஆகவே, தாங்கள் ஆளுநர் மாளிகைக்கு இந்த வாரத்தில் எந்த நேரம் வேண்டு மானாலும் பேச்சுவார்த்தைக்கு வாருங் கள். முட்டுக்கட்டைக்கு தீர்வு காணுங்கள்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பான ர்ஜிக்கு, ஆளுநர் ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.