புதுதில்லி, ஜன.11- 7 நீதிபதிகள், 2 வழக்கறிஞர்கள் உள்பட 9 பேரை கர்நாடகம், மும்பை, கவுகாத்தி உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களின் நீதிபதி களாக நியமிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் செவ்வாய்க் கிழமை பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, நீதிபதிகள் ராமச்சந்திர தத்தாத்ரே, வெங்கடேஷ் நாயக், வழக்கறி ஞர் நாகேந்திர ராமச்சந்திர நாயக் ஆகி யோர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ள னர். வழக்கறிஞர் நீலா கேதார் கோகலே மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நீதி பதி மிருதுள் குமார் கலிதாவை கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நீதிபதிகள் பி. வெங்கடேஷ் ஜோதிர்மாய், வி. கோபால கிருஷ்ண ராவ் ஆகியோரை ஆந்திர உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும் நியமிக்க கொலீஜி யம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதி கள் அரிபம் குணேஷ்வர் சர்மா, கோல்மெய் கைபுல்ஷில்லு ஆகியோர் மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதி பதியாக வழக்கறிஞர் நாகேந்திர ராமச்சந்திர நாயக்கை நியமிக்கும் முடிவை கொலீஜியம் மூன்றாவது முறையாக எடுத்துள்ளது. கொலீஜியம் தற்போது பரிந்துரைத் துள்ள பெயர்களில் மற்றொரு முக்கியமான நபர், வழக்கறிஞர் நீலா கோலே. இவர், இந் துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப் பட்ட மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முன் னாள் ராணுவ அதிகாரி லெப்.கர்னல் பிர சாந்த் ஸ்ரீகாந்த் புரோகித்தின் சார்பில் ஆஜ ரானவர். இவர் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள் ளார்.