கோவா விமான நிலை யத்தில் சர்மிளா ராஜ சேகர் என்ற தமிழ்ப் பெண்ணிடம் வழக்கமான சோத னையில் ஈடுபட்ட சிஐஎஸ்எப் பாது காப்புப்படை வீரர் இந்தி மொழியில் விசாரித்துள்ளார். சர்மிளா ராஜ சேகருக்கு இந்தி மொழி தெரி யாததால்,”நீங்கள் பேசியது எனக்கு புரியவில்லை” எனக் கூறி யுள்ளார். இதற்கு பாதுகாப்புப் படை வீரர்,“இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா? கூகு ளில் பாருங்கள்” எனக் கூறியுள்ளார். இந்தி தேசிய மொழி அல்ல. அலுவல் மொழி என சர்மிளா ராஜ சேகர் ஆங்கிலத்தில் கூறியுள்ளார். ஆனால் பாதுகாப்புப்படை வீரர் “இந்தியை கற்றுக்கொள்ளுங்கள்” என மிரட்டியுள்ளார். மேலும் அங்கு இருந்த அதிகாரிகள், பயணிகள் உள்ளிட்ட பலர்,”இந்தி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்” என கோஷ மிடுவது போல மிரட்டியுள்ளனர். இந்தி மொழி திணிப்பு மிரட்டலால் குழந்தையுடன் கோவா விமான நிலையத்திலேயே தமிழ் பெண் சர்மிளா ராஜசேகர் பரிதவித்துள் ளார். இதனை சர்மிளா ராஜசேகர் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்தி மொழிக்காக தமிழ்ப் பெண் சர்மிளா ராஜசேகரை அவ மதித்த விவகாரம் தொடர்பாக தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக் கத்தில், “கோவா விமான நிலை யத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரி யாது என்று சொன்னதும் சிஐஎஸ்எப் வீரர் ஒருவரால் மிரட்டப் பட்டுள்ளார். “தமிழ்நாடு இந்தியா வில்தானே இருக்கிறது” என்றும், “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்” என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலு வல் மொழியே தவிர தேசிய மொழி யல்ல என்று அவருக்கு யார் சொல் வது? பல்வேறு மொழி பேசும் மக்க ளின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட் டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல் பட வேண்டும். விமான நிலையங்க ளில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்” என கண்ட னம் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் டிரெண்ட் ஆகும் #StopHindiImposition ஹேஸ்டேக்
மேலும் இந்த விவகாரம் தொடர் பாக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித் துள்ள நிலையில், இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் #StopHindi Imposition என்ற பெயரில் புதிய ஹேஸ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.