states

img

மணிப்பூர் இன மோதலுக்கு முதல்வர் பைரன்சிங் தான் காரணம்

உயிருக்கு பயந்து மணிப்பூரை விட்டு வெளியேறும் “குக்கி” இன மக்கள்

பழங்குடி அந்தஸ்து வேண்டும் என போராடத் தூண்டப்பட்டுள்ள மெய்டெய் பிரிவினர், “குக்கிகள் மணிப்புரிகள் அல்ல”, “அனைவரையும் கொல்லுங்கள்” என்ற வெறுப்பு கோஷங்களுடன் வன்முறையை தூண்டி வருகின்றனர். முக்கியமாக குக்கி இன மக்கள் வாழும் பகுதியில் கும்பல் தாக்குதலை தொடுத்து, வீடு, கடை என அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி வருகின்றனர். “மெய்டெய்” பிரிவு குழுக்களிடம் துப்பாக்கி புழக்கம் அதிகம் இருப்பதால், “குக்கி” இன மக்கள் உயிருக்கு பயந்து வேறு இடத்திற்கு செல்கின்றனர். சில “குக்கி” இன மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு இடம் பெயருகின்றனர். போதிய பாதுகாப்பு, இழப்பீடு பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லாததால் அவர்கள் துயரின் பிடியில் சிக்கியுள்ளனர் என, மணிப்பூர் தகவல்கள் கூறுகின்றன.

இம்பால், மே 12- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பரவலாக வசிக்கும் “மெய்டெய்” சமூக மக்கள் தற்போது பட்டியல் வகுப்பினராக  (Scheduled Castes) வகைப் படுத்தப்பட்டு வாழ்கின்றனர். ஆனால் தங்களைப் பழங்குடியினராக (Scheduled Tribes) அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதனை வாக்கு அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக, கடந்த தேர்தலில் (2022) மணிப்பூரில் தாங்கள் ஆட்சியதி காரத்திற்கு வருவதற்காக “மெய்டெய்” மக்களுக்கு பழங்குடி யினர் அந்தஸ்து வழங்குவதாக ஆசை காட்டியது. மெய்டெய் மக்க ளும் அதனை நம்பி மீண்டும் பாஜக வை ஆதரித்து அரியணையில் அமர்த்த, பைரன் சிங் முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு “மெய் டெய்” மக்களின் கோரிக்கையை பாஜக மறந்துவிட்டது.

இதனால் மெய்டெய் மக்கள் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தை நாடி னர். இந்த விவகாரத்தில் உரிய முடிவு  எடுக்குமாறு மணிப்பூர் பாஜக அர சுக்கு கடந்த ஏப்ரல் 19 அன்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு “மெய்டெய்” மக்களை பழங்குடி களாக அறிவிக்க அனுமதிக்கமாட் டோம் என்று மணிப்பூரிலுள்ள 34 துணைப்பிரிவுகளை உள்ளடக்கிய குக்கி-ஜோமி பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் “அனைத்து மணிப்பூர் பழங்குடி மாணவர் சங்கத்தின் (ATSUM)” தலைமையில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் மே 3 அன்று “பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி” நடத்தினர். சுராசந்த்பூர், மொய்ராங், மோட்பங், மோரே ஆகிய இடங் களில் நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. அடுத்த சில  மணிநேரங்களில் மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. ஊரடங்கு, இணையதள  முடக்கம், எஸ்எம்எஸ் தடை என கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டாலும்  தற்போது வரை பதற்றம் முழுமையாக குறைந்தபாடில்லை. கடந்த 8 நாட்களாக தொடரும் மணிப்பூர் வன்முறையில் இதுவரை 60 பேர் இறந்துள்ளனர். 231 பேர் காய மடைந்த நிலையில், 1,700-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் எரிக்கப் பட்டுள்ளன. 35,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

பாஜக எம்எல்ஏ வாக்குமூலம்

மணிப்பூர் கலவரம் குறித்து “தி வயர்” செய்தி நிறுவனம் சார்பில், (பிர பல பத்திரிகையாளர் கரண் தாப்பர்  எழுப்பிய கேள்விக்கு), அம்மாநி லத்தின் சைகோட் தொகுதி பாஜக  எம்எல்ஏ பவோலியன்லால் ஹவோ கிப் கூறியதாவது “மணிப்பூர் மாநி லத்தில் என்ன நடக்கிறது என்பதை புரியும்படி சொன்னால் “ஒரு இன  அழிப்பு” வெளிப்படையாக அரங் கேறுகிறது எனக் கூறலாம். இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குக்கி குடியிருப்புகளும் எரிக்கப் பட்டுள்ளன. “மெய்டெய்” மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள  அனைத்து “குக்கி” இன மக்க ளின் குடியிருப்புகள் குறிவைக்கப் பட்டு பல கிராமங்கள் சூறை யாடப்பட்டுள்ளன. மணிப்பூர் காவல் துறை கமாண்டோக்கள் குக்கிகளுக்கு எதிராக களமிறங்கி, இன அழிப்புக்கு ஆதரவாக இருக்கின்றனர். எல்லாவற்றையும் திறமையற்ற முறையில் கையாளுவதற்கு சிறந்த  எடுத்துக்காட்டாக மணிப்பூர் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்பதால், நான் எனது முதல்வர் (பைரன் சிங்) மீது நம்பிக்கை இழந்து விட்டேன். பாரபட்சம் கொண்ட பைரன் சிங் “குக்கி” இன மக்களுக்கு எதிரானவர்.  அவரது ஆட்சியில் குக்கிகள் எந்தப் பேச்சுக்களையும் ஏற்க வாய்ப்பில்லை. “குக்கி” இன மக்களை அழிக்க “மெய்டெய்” இன  கலவரக்காரர்களுக்கு அரசுப் படை கள் வெளிப்படையாக உதவி செய்வ தாகத் தெரிகிறது. இப்பிரச்சனை யைக் கையாளும் விதத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்பதால் மணிப்பூரில் ஆட்சி தலைமை மாற்றத்தை நான் விரும்புகிறேன், இல்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கலாம்” எனக் கூறினார்.

பைரன் சிங் கூறியது உண்மை

குக்கி இன மக்கள் வெளிநாட்டி னர் என்றும், சட்டவிரோதமாக குடி யேறியவர்கள் என்றும், போதைப் பொருள் வர்த்தகம், கசகசா  சாகுபடி, வன நிலத்தில் அத்துமீறல் போன்றவற்றில் ஈடுபட்டதாகவும் முதல்வர் பைரன் சிங் கூறியிருந்த தாக முன்பு எழுந்த குற்றச்சாட்டு உண்மையானதுதான் என பாஜக  எம்எல்ஏ ஹவோகிப் இந்தப் பேட்டி யில் தற்போது உறுதிப்படுத்தினார்.