states

img

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்!’ திட்டம் சரியானதுதானாம்...

புதுதில்லி, மார்ச் 10- ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பது ஒரு நல்ல யோசனை எனவும், தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல் களையும் ஒரே நேரத்தில் நடத்து வதற்குத் தயாராக உள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணை யர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.  உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா பேட்டி ஒன்றை வழங்கினார். அதில்தான், “எதிர்காலத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கை யை கொண்டு வருவது நல்ல யோச னைதான், ஆனால், இந்த மாற்றத் திற்கு கால அவகாசம் தேவைப்படும், அதை அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப் பட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துமாறு கோரப்பட்டால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யத் தயாராக உள்ளது. அதற்கான திறனுடையதாகவும் தேர் தல் ஆணையம் உள்ளது” என்று சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும், “அரசியலமைப்புச் சட்டத் தின்படி அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். அனைத்து தேர்தல்களையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த ஆணையம் தயாராக உள்ளது. தற்போது கூட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றி கரமாக நடத்தியுள்ளோம்’ என்று கூறிய சுஷில் சந்திரா, வாக்கு இயந்தி ரங்களில் முறைகேடு நடப்பதாக எழும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.  “வாக்கு எண்ணிக்கை என்பது வெளிப்படையான செயல். அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் வர அனு மதிக்கப்படுவார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறை கேடு செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை” என்றும் குறிப்பிட்டுள் ளார்.