states

img

பாஜகவுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவுகள் காத்திருக்கின்றன!

லக்னோ, ஜன.20- ஆதித்யநாத் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், தேர்தலுக்குப் பிறகு, பாஜக-வுக்கு அதிர்ச்சிகரமான முடிவுகள் காத்தி ருப்பதாகவும் சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில தேர் தல் பொறுப்பாளருமான பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். இதுதொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி யளித்துள்ளார்.  அதில், “உ.பி. விவசாயிகளை அனைத்து வழிகளிலும் ஒடுக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. பண வீக்கம், வேலையின்மை போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டுமானால் ஆட்சியில் உள்ள பாஜக அரசை உ.பி. மக்கள் அகற்ற வேண்டும். நான் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன்.

யோகி ஆதித்யநாத் அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்” என்று தெரி வித்துள்ளார். முன்னதாக மதுராவில் உள்ள பிஹாரி கோயிலுக்கு சென்று வழிபட்ட பூபேஷ் பாகேல், “உண்மைக்காக போராடிய மிகப்பெரிய அரசியல்வாதி பகவான் கிருஷ்ணர். நாங்கள் அனை வரும் அவரிடமிருந்தே அரசியலை கற் றுக் கொண்டோம்” என்றும் குறிப் பிட்டுள்ளார். “எதிர்வரும் சட்டப்பேரவை தேர்த லில் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வரும். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நாட்கள் கடந்து விட்டன. உத்தரப்பிரதேசத்தில் காங்கி ரசின் நிலைமை வலுவாக உள்ளது. பிரியங்கா காந்தியின் தலைமையில் இந்த அமைப்பு வலுவாகி உள்ளது. காங்கிரஸூக்கு களத்தில் பெரும் ஆத ரவு உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

;