states

img

முடக்கப்பட்ட தணிக்கை நடைமுறை

பாதுகாப்புப் படைகளுக்கான தணிக்கை அமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இப்போதெல்லாம் தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கைகள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வலைத்தளங்களில வெளி யிடப்படுவதில்லை. 2017 இல் தான் தணிக்கை அறிக்கைகள்  கடைசியாக பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டன. அண்டை நாடுகளுடன் ஏதேனும் மோதல்  ஏற்படுமாயின் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமான வெடி மருந்து கள் கையிருப்பில் உள்ளன என்று தலைமை தணிக்கையாளர் தனது தணிக்கை குறிப்பில் அம்பலப்படுத்தினார். இதனால் மோடி அரசின் தேசபக்தி கூச்சல் அம்பலமானது.  உடனே, நாட்டின் பாதுகாப்பு காரணங்கள் என்று சாக்கு போக்குகளைக் கூறி தலைமை கணக்காயரின் தணிக்கை அறிக்கைகளை மக்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இது  போன்ற வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகளால் முப்படை களின் செயல்பாடுகள் குறித்து அரசமைப்புச் சட்டம் அனு மதித்துள்ள முறைகளிலே கூட கூர்ந்தாய்வு செய்ய முடிய வில்லை. ராணுவம் தவறு செய்ய முடியாதது, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எனும் வெகு மக்களின் கருத்தும் இது போன்ற வெளிப்படைத்தன்மையற்ற போக்குக்கு மேலும் வலு சேர்க்கிறது.