states

img

பிற்படுத்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டம்!

என்சிஇஆர்டி தயாரிக்கும் சிபிஎஸ்சி பாடப் புத்தகத் தில் வருணாசிரம தர் மத்தை விளக்கு கிறோம் என்ற பெயரில் சூத்தி ரர்களான நாட்  டின் பெரும்  பான்மையான பிற்படுத்தப் பட்ட மக்கள் இழிவுபடுத்தப் பட்டு உள்ளதாக தமிழ்நாடு சிறு பான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விமர்சித்துள்ளார்.  இதுதொடர்பாக டுவிட்டர் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு சரித்  திர புத்தகத்தில் 2 ஆம் பாடமாக வரு ணாசிர தர்மத்தை விளக்கும் பாடத்தில் கீழே காணும் படத்தி னைப்போட்டு சூத்திரர்களுக்கு மட்டும் கோவணத்தைக் கட்டி விட்டுள்ளார்களே! சூத்திரர்கள் அனைவருக்கும் பணிவிடை செய்பவர்கள் என எழுதியுள் ளதே! இதைப்படிக்கும் பிஞ்சு உள்  ளங்களில் சாதி ஆணவம் எனும்  நச்சு கலக்காதா? இது உண்மை யாக இருப்பின் இப்பாடத்தை உட னடியாக நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.