திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையி லான அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் பிர்ஹாத் ஹக்கீம். உள்ளாட்சி அமைப்புகளில் பணி களுக்கு ஆட்களை தேர்வு செய்வ தில் ஊழல் செய்ததாக பிர்ஹாத் ஹக்கீம் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா வில் உள்ள பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை முதல் சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த சோதனையில் பல் வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மதன் மித்ரா வீட்டிலும் சிபிஐ அதி காரிகள் சோதனை நடத்தி வருகின்ற னர். கமர்ஹாட்டி நகராட்சி ஊழல் தொடர்பாக மதன் மித்ரா வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள் ளது. 4 நாட்களுக்கு முன் ஊழல் வழக்கில் உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை நடத்தி யது. ஏற்கெனவே திரிணமூல் காங்கி ரஸ் கட்சியின் ஒரு அமைச்சரும், சில எம்எல்ஏக்களும் கைது செய்யப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.