புதுதில்லி, ஆக. 21 - காவிரியில் தமிழ கத்திற்கு உரிய பங்கீட்டை வழங்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு உச்சநீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்திரு ந்தது. இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், 3 நீதிபதி கள் கொண்ட தனி அமர்வை உடனடியாக ஏற்படுத்துவ தாக கூறியிருந்தார். அதன்படி காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசா ரிக்க நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய புதிய அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்து ள்ளது. மேலும், இந்த புதிய அமர்வு முன்பு, காவிரி வழக்கு ஆகஸ்ட் 25 அன்று விசாரணைக்காக பட்டிய லிடப்பட்டு உள்ளது. இதனிடையே, தமிழ் நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கில், தங்களின் தரப்பை யும் கேட்ட பிறகே, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு இடையீட்டு (கேவியட்) மனு தாக்கல் செய்துள்ளது.