ஜெய்ப்பூர், பிப்.7- ராஜஸ்தான் மாநிலத்தில் 25 வயது தலித் இளைஞர் ஒரு வரைத் கடுமையாகத் தாக்கி, அவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்திற்கு உட்பட்ட ருக்கா சர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் மேக்வால். தலித் இளை ஞர் ஆவார். கடந்த ஜனவரி 26 அன்று வீட்டில் இருந்த மேக் வாலை, அதே கிராமத்தைச் சேர்ந்த உமேஷ் ஜாட் தலைமை யில் 8 பேர் சேர்ந்து, கார் ஒன்றில் வலுக்கட்டாயமாக ஏற்றி, அரு கில் உள்ள வயலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு வைத்து, மேக்வாலின் வாயில் கட்டாயமாக மதுவை ஊற்றிக் குடிக்க வைத்துடன், ‘தலித்துக் கள் ‘ஜாட்’ சமூகத்தினருடன் மோதுவீர்களா? இதற்கெல் லாம் உங்களுக்கு பாடம் கற் பிப்போம்’ என்று கூறியும், சாதி யை இழிவுபடுத்தும் வார்த்தை களால் திட்டியும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மதுபானம் காலியான நிலை யில், உமேஷ், தாராசந்த், அக் ஷய், ராகேஷ், ராஜேஷ், தினேஷ், பிடாதி சந்த் மற்றும் பீர்பால் ஆகிய அந்த 8 பேரும், அந்த பாட்டிலில் சிறுநீர் கழித்து, அதையும் மேக்வாலை குடிக்க வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் மேக் வால் மயங்கிய நிலையில், அவர் இறந்துவிட்டதாக கருதி, செல் போனை திருடிக்கொண்டு, படு காயங்களுடன் மேக்வலை கிரா மத்தில் தூக்கி வீசிச் சென்றுள்ள னர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 143 (சட்டவிரோ தமான கூட்டம்), 323 (காயப்படுத் துதல்), 365 (கடத்தல்), 382 (கொலை, காயம் ஏற்படுத்தித் திருடுதல்) ஐபிசியின் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.