states

1 மக்களவை, 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அடிவாங்கிய பாஜக!

புதுதில்லி, டிச.8- இமாசல பிரதேசம், குஜராத்  சட்டப்பேரவைத் தேர்தலோடு, உ.பி., பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்  கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த மக்களவை மற்றும் 6 சட்டமன்றத் தொகுதி களுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒரு சட்டமன்றத்  தொகுதி தவிர அனைத்து இடங் களிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு காங்கிரஸ், சமாஜ் வாதி, ராஷ்ட்ரிய லோக்தளம், ஐக்கிய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளே வெற்றிபெற்றுள்ளன.  உத்தரப்பிரதேசத்தில்  சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறை வால் காலியான மெயின்புரி மக்  களவைத் தொகுதிக்கும், சமாஜ் வாதி கட்சி எம்எல்ஏவாக இருந்த  ஆசம்கான், பாஜக எம்எல்ஏ-வாக இருந்த விக்ரம் சிங் சைனி ஆகியோர் வெவ்வேறு வழக்கு களில் சிறைத்தண்டனை விதிக்  கப்பட்டு, தகுதி நீக்கத்துக்கு உள்  ளானதால், முறையே ராம்பூர்  சதார், கதாலி தொகுதிகளுக் கும் திங்களன்று இடைத் தேர் தல் நடைபெற்றது. 

மெயின்புரி மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி  சார்பில் முலாயம் சிங்-கின் மரு மகளும், உ.பி. முன்னாள் முதல்  வர் அகிலேஷின் மனைவியு மான டிம்பிள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ரகுராஜ் சிங் ஷக்யா நிறுத்தப் பட்டார். வியாழனன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், சமாஜ்வாதி வேட்பா ளர் டிம்பிள் 64 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்  பெற்று வெற்றிபெற்றார். பாஜக  வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யா  3 லட்சத்து 29 ஆயிரத்து 489  வாக்குகளை (34.18 சதவிகிதம்)  பெற்ற நிலையில், டிம்பிள் யாதவ் 6 லட்சத்து 17 ஆயிரத்து 625 வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான் 9 முறை வெற்றி பெற்ற ராம்பூர் சட்டமன்றத் தொகுதியை பாஜக கைப்பற்றி யுள்ளது. இங்கு பாஜக வேட்பா ளர் ஆகாஷ் சக்சேனா 81 ஆயி ரத்து 371 வாக்குகளை (62.06 சத விகிதம்) பெற்ற நிலையில்,  சமாஜ்வாதி வேட்பாளர் முகம்  மது ஆசிம் ராஜா 47 ஆயிரத்து 271 (36.05 சதவிகிதம்) வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந்தார்.

அதேநேரம் உ.பி.யில் தனது வசமிருந்த கதாலி தொகுதியை பாஜக இழந்துள்ளது. இங்கு பாஜக வேட்பாளர் ராஜ்குமாரி 74 ஆயிரத்து 906 வாக்குகளை  (41.72 சதவிகிதம்) பெற்ற நிலை யில், சமாஜ்வாதி கூட்டணியி லுள்ள ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி வேட்பாளர் மதன் பையா  97 ஆயிரத்து 0071 வாக்குகளை (54.04 சதவிகிதம்) பெற்று வெற்றி பெற்றார். பீகார் மாநிலத்தில் இடைத்  தேர்தல் நடைபெற்ற குர்கானி  தொகுதியை மகா கூட்டணியிட மிருந்து பாஜக கைப்பற்றியுள் ளது. இங்கு பாஜக வேட்பாளர்  கேதர் பிரசாத் குப்தா 76 ஆயி ரத்து 648 வாக்குகளைப் பெற்ற நிலையில், மகா கூட்டணி சார் பில் போட்டியிட்ட ஐக்கிய ஜன தாதளம் வேட்பாளர் மனோஜ் கு. சிங் 73 ஆயிரத்து 016 வாக்கு களுடன் அபார வெற்றி பெற் றார்.

சத்தீஸ்கர் மாநிலம் பானுபிர தாப்பூரிலும் பாஜக தோற்றுப் போனது. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாவித்திரி மனோஜ் மாண்டவி, 65 ஆயி ரத்து 327 வாக்குகளை (44.88 சத விகிதம்) பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் பிரம்மானந்ந் நீதம் 44 ஆயிரத்து 229 வாக்கு களை (30.37 சதவிகிதம்) மட்  டுமே பெற்றுத் தோற்றுப் போனார். ஒடிசாவின் பதம்பூர் தொகு தியிலும் பாஜகவுக்கு தோல் வியே கிடைத்துள்ளது. இங்கு  ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் அபார வெற்றி பெற்றுள் ளது. பிஜூ ஜனதாதளம் வேட்பா ளர் பர்ஷா சிங் பரிஹா 1 லட்  சத்து 20 ஆயிரத்து 672 வாக்கு களை (58 சதவிகிதம்) பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் பிரதீப் புரோகித் 78 ஆயிரத்து 034 வாக்குகளை (37.51 சத விகிதம்) பெற்று தோற்றுப் போனார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில், இங்கு சர்தார் சாஹர் தொகு திக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது. இங்கும் பாஜக-வுக்கு தோல்வியே கிடைத்தது. காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் சர்மா 99 ஆயிரத்து 915 வாக்குகளை (43.54 சதவிகிதம்) பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் அசோக்குமார் 64 ஆயிரத்து 219 வாக்குகளை (30.74 சதவிகிதம்) பெற்று தோற்றுப்போனார்.