பாசிச சித்தாந்தத்தை தூக்கிப் பிடித்திடும் ஆர்எஸ்எஸ்-இன் விளையாட்டு மைதானமாக இந்தியா மாறக்கூடாது என விரும்பும் அனைவரும், ஒன்றுபட்டு நின்று உறுதியானமுறையில் இந்த அச்சுறுத்தலை எதிர்த்திட வேண்டும். இடதுசாரிகள், இந்துத்துவா எதேச்சதிகாரத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தை எவ்வித சமரசமுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தலைமையேற்றிட வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் இந்துத்துவா வெறியர்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் தொடுப்பது கூர்மை யான அளவில் அதிகரித்திருக்கிறது. ஏப்ரல் 2 அன்று ஒன்பது நாட்களுக்குத் தொடங்கிய நவராத்திரி பண்டிகையைப் பயன்படுத்திக் கொண்டும், இது முடிவுறும் நாளான ஏப்ரல் 10 ராம நவமி தினத்தன்றும் ஆர்எஸ்எஸ்-இன் வெறித்தனமான அமைப்புகளான விசுவ இந்து பரிசத்தும், பஜ்ரங் தளமும் முஸ்லீம்கள் மீது எப்படியெல்லாம் தாக்கு தல் தொடுக்கலாம் என முன்கூட்டியே நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளனர். அதாவது அப்போது நடைபெறும் ஊர்வலங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ஊர்வலத்தில் ஆயுதங்களுடன் செல்வது, மசூதி அருகே ஊர்வலங்கள் வரும்போது முஸ்லீம்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்புவது, இதற்கெதிராக ஏதேனும் மோதல்களோ, சண்டைகளோ வந்தால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு கலவரங்களில் ஈடுபடுவது, முஸ் லீம்களின் கடைகளைச் சூறையாடுவது, வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவது மற்றும் தீக்கிரையாக்குவது என்று இழி செயல்களில் ஈடுபடுவது. இவ்வாறு இவர்கள் நாட்டின் பல பாகங்களில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தன்னிச்சையாக ஏற்பட்டவையல்ல
இந்த வன்முறைக் கலவரங்கள் எதுவும் தன்னிச்சையாக ஏற்பட்டவை அல்ல. ஏப்ரல் 10 அன்று குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் கோவா என ஆறு மாநிலங்களில் ஒரே மாதிரியாகவே முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நடந் துள்ளன. ராமநவமி ஊர்வலங்கள் செல்லும் போது முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி களில் சுமார் 12 இடங்களில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்துள்ளன. முன்ன தாக, ஏப்ரல் 2 அன்று, ராஜஸ்தான் மாநிலத் தில் கராளி என்னுமிடத்தில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் முதல் தாக்குதல் நடந்தது. இந்த இடங்களில் பாதிப்புக்கு உள் ளான முஸ்லீம்கள் மிகவும் வறியநிலை யில் வாழ்பவர்கள். இவர்களின் வீடுகளும், கடைகளும்தான் சூறையாடப்பட்டிருக்கின் றன அல்லது இடித்துத் தரைமட்டமாக் கப்பட்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலுமே, இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவதற்கு காவல் துறையினர் எவ்விதத்திலும் தலையிட வில்லை. மாறாக சம்பவம் நடைபெற்ற பின்னர், தங்கள்மீது ஏவப்படும் தாக்குதல் களைத் தடுத்து நிறுத்த முயற்சித்த முஸ்லீம் களைத்தான் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளார்கள்.
மற்றொரு சுற்றுத்தாக்குதல்கள்
இதன் பின்னர் ஒருவாரம் கழித்து, நான்கு மாநிலங்களில் முஸ்லீம்கள் மீது மற்றொரு சுற்று தாக்குதல்கள் தொடுக்கப் பட்டுள்ளன. ஏப்ரல் 16 அன்று அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள் நடந்தபோது இவை நடந்துள்ளன. மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளில் எப்படி வன்முறை வெறி யாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டதோ அதே பாணியில்தான் இப்போது நடை பெற்ற வன்முறை வெறியாட்டங்களும் அரங்கேறியுள்ளன. ஆந்திரப்பிரதேசம் கர்னூலில் ஹோல குண்டா கிராமத்திலும், உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்கியில் பகவான்பூரிலும், தில்லியில் ஜஹாங்கீர்புரியிலும் இதே போன்றே வன்முறை வெறியாட்டங்கள் நடந்துள்ளன. இவை அனைத்துக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவும் இருந்துள் ளது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. மத்தியப்பிரதேசத்தில் உள்துறை அமைச்ச ரின் உத்தரவுக்கிணங்க கார்கோன் என்னு மிடத்தில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான வீடுகளும், கடைகளும் டஜன் கணக்கில் புல்டோசரால் தரைமட்டமாக்கப்பட்டிருக் கின்றன. புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் வாழும் இடங்களை இடித்துத்தரைமட்ட மாக்கும் கொள்கையை உத்தரப்பிர தேசத்தில் ஆதித்யநாத் அரசாங்கம்தான் ஆரம்பித்து வைத்தது. இப்போது இது பாஜக ஆளும் இதர மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பகவான்பூரில் ஒரு புல்டோ சர் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டபின், அங்கே வாழும் முஸ்லீம்கள் மத்தியில் ஓர் அச்சுறுத்தல் அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. அதாவது, “காவல்துறையினரால் தேடப் படும் முஸ்லீம்கள் உடனடியாக சரணடை யாவிட்டால், அவர்களின் வீடுகள் தரைமட்ட மாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தடையையும் மீறி...
தில்லியில் ஜஹாங்கீர்புரி பகுதிக்கு புல்டோசர்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இங்கே காவல்துறையினர் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இங்கே புல்டோசர்களைக் கொண்டு கட்டி டங்களை இடிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்திலிருந்து தடையாணை பெற்று, அவர்களிடம் கூறப்பட்ட போதிலும்கூட அதனைக்கண்டுகொள்ளாமல், சுமார் இரண்டு மணி நேரம் கடைகளையும் வீடு களையும் இடித்துத் தரைமட்டமாக்கி யுள்ளார்கள். கடந்த மூன்று வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் நிகழ்வுகள் எவ்வாறு நடந்துள் ளன என்பதை மிகவும் சரியானமுறையில் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பும் பல இடங்களில் மதஞ் சார்ந்த நடவடிக்கை கள் நடைபெறும்போது, சில குழுக்களுக்கு இடையே மோதல்கள் இங்கொன்றும் அங் கொன்றுமாக ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது நடந்துள்ளவை அவை போன்றதல்ல. இவற்றை இந்துத்துவா மத வெறியர்கள், முஸ்லீம் மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நாட்டின் பல மாநிலங்களில் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு மேற் கொண்டு புதிய மட்டத்திற்கே எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அங்கங்கே உள்ளூர்மட்டத் தில் இனப்படுகொலைகள் நடைபெறுவ தற்கான ஆபத்துக்கள் இருக்கின்றன.
கட்டவிழ்த்து விடப்படும் கிரிமினல் நடவடிக்கைகள்
நாட்டில் வேலையில்லா இளைஞர்க ளின் பட்டாளம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியா னது சமூகத்தின் பெரும்பாலான பிரிவுக ளைக் கடுமையாகப் பாதித்துள்ள நிலை யில், இந்துத்துவா அமைப்புகளின் கீழ் இயங்கிடும் பிளவுவாத மற்றும் மதவெறி பிடித்த அணியினர் முஸ்லீம்களுக்கு எதி ராக கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடு படுத்தப்படுவதற்காகக் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மதப் பண்டிகை ஊர்வலங்கள் என்ற போர்வை யில் இவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து, மசூதிகளுக்கு முன்னே நின்று கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும்விதத்தில் கோஷங்களை முழங்கப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவை முஸ்லீம்களை மட்டரகமான முறையில் அவமானப்படுத்த வேண்டும் என்கிற இந்துத்துவாவாதிகளின் இழிநோக்கமே யாகும். இதற்கெதிராக எதிர்ப்பு எவ்விதத்தி லாவது வந்தாலோ, அல்லது, இவ்வாறான ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக எவராவது ஆட்சேபணை மேற்கொண்டாலோ உடன டியாக அங்கே அரசு எந்திரம் மற்றும் காவல் துறை நடவடிக்கைக்கு வருகின்றது. எதிர்ப்ப வர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். முஸ்லீம் களின் வீடுகளும், கடைகளும் புல்டோசர்க ளைக் கொண்டு தரைமட்டமாக்கப்படு கின்றன. முஸ்லீம்களுக்கு எதிராக கிரி மினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்துத் துவா அணியினர் மீது எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படுவதில்லை.
ஆர்கனைசரின் குரல்...
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கூற்றின்படி இப்போது நடைபெற்ற வன்முறை வெறி யாட்டங்களுக்கெல்லாம் பொறுப்பான வர்கள் முஸ்லீம் தீவிரவாதிகளாம். அதன் அதிகாரப்பூர்வ வார இதழான, ஆர்கனை சர், இதழில் “பாரதத்தில் உள்ள இஸ்லா மிஸ்ட்டுகள் இந்து புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களையும், ராம நவமி கொண்டாட்டங்களையும் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வெறித் தனத்தில் ஈடுபட்டுள்ளார்கள்,” என்று கூறி யிருக்கிறது. இது ஒருவிதமான “ஒத்திசைக் கப்பட்ட ஜிகாத்” (“synchronized jihad”) என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது. இவ் வாறு, இந்த வன்முறை வெறியாட்டங்க ளைச் செய்தவர்களே, இவற்றால் பாதிக் கப்பட்டது தாங்கள்தான் என்பதுபோன்று பாசிச பாணி பேச்சுக்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை எதிர்த்து நிற்கும் மிருகத்தின் சுபாவம் என்ன என்பது நமக்குத் தெளி வாகவே தெரிகிறது. இது இந்துத்துவா வெறித்தனமாகும். சமூகத்தில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவுவதற்காகவும், சிறுபான்மையினர் மீது தன் ஒட்டுமொத்த ஆதிக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் கடைப்பிடித்திடும் இழிவான உத்திகளே இவையாகும். பாசிச சித்தாந்தத்தை தூக்கிப் பிடித்தி டும் ஆர்எஸ்எஸ்-இன் விளையாட்டு மைதா னமாக இந்தியா மாறக்கூடாது என விரும்பும் அனைவரும், ஒன்றுபட்டு நின்று உறுதி யானமுறையில் இந்த அச்சுறுத்தலை எதிர்த்திட வேண்டும். இடதுசாரிகள், இந்துத்துவா எதேச்சதிகாரத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தை எவ்வித சமரசமு மின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தலைமையேற்றிட வேண்டும்.
ஏப்ரல் 20, 2022.
தமிழில்: ச.வீரமணி