பத்தனம்திட்டா, மே 1- மோடி அரசின் அடையாளமாக புல்டோசர் மாறிவிட்டது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிருந்தா காரத் கூறினார். அரசி யல் சாசனம், அடிப்படை உரிமை கள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாஜக அரசு புல்டோசர் கொண்டு தகர்த்து வருகிறது; பாஜக அரசின் சிறுபான்மையினர் மீதான அணுகு முறையை தலைநகரில் காண முடிந்தது என்றார் அவர். பத்தனம்திட்டாவில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநில மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டத்தை சனியன்று (ஏப்.30) பிருந்தா காரத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: சாதாரண மக்களின் கட்டி டங்கள் புல்டோசர்களால் அழிக் கப்படுகின்றன. அவர்கள் அம்பா னியோ அதானியோ அல்ல. மதம் தொடர்பான கொண்டாட்டங்கள் சமத்துவம் மற்றும் அமைதியின் செய்தியை உயர்த்திப்பிடிக்க வேண்டும். ஆனால் ராம நவமி கொண்டாட்டம் என்ற போர்வை யில் சங்பரிவார் கும்பல் எட்டு மாநி லங்களில் முஸ்லிம்கள் மீது தாக்கு தல் நடத்தியுள்ளது. தில்லி ஜஹாங் கீர்புரியில் பெண்கள், விதவைகள் உள்ளிட்டோர் கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டன. ஒரு நாட்டில் சுதந் திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இவையெல்லாம் நடக்கின்றன.
மனுவாத, இந்துத்துவா கொள் கைகளை பாஜக செயல்படுத்தி வருகிறது. கேரளாவில், கிறிஸ்தவ சமூகங்களின் தலைமைக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கிறது. மற்ற மாநி லங்களில் கிறிஸ்தவ சமூகம் தாக் கப்படுகிறது. மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் மதமாற்றத் தடைச் சட்டத்தை பாஜக அறி முகப்படுத்துகிறது. இங்கே காங்கி ரசும் இதற்கெல்லாம் அனுமதி தரு கிறது. மோடி மேக் இன் இந்தியாவை அல்ல, சேல் (விற்பனை) இந்தி யாவை அமல்படுத்துகிறார். பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன. இந்தியாவில், உற்பத்தி செய்யப்படவில்லை; விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ரயில்வேயும் ஏர் இந்தியா வும் உதாரணம். வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள்தான் இதற்கு எதிராக எதிர்வினையாற்றி வருகின்றன. நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் மாத வருமானம் ரூ.10,000 கூட இல்லை. அங்குதான் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறு வனங்கள் தினமும் பத்தாயிரம் கோடிகளை சம்பாதிக்கின்றன. முற்போக்கான கேரளாவை முன்னோக்கி கொண்டு செல்ல- ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்பு களின் தாக்குதல்களை முறியடிக்க வாலிபர் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. தொற்று நோய் காலத்தில் மோடி எழுப்பிய மக்கள் விரோதச் சூழலைச் சமா ளிக்க கேரள இடதுசாரி அரசு வித்தி யாசமான கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இது போன்ற மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்தியதற்காக கேரளா வை ஒன்றிய அரசு தாக்குகிறது என்றார் பிருந்தா.