புதுதில்லி, ஜன.4- ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை, 2022 உலக பிரெய்லி தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் செயலாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக பிரெய்லி தினம், பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய லூயிஸ் பிரெய்லி யின் பிறந்த தினமான ஜனவரி 4 அன்று உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. பிரெய்லி எழுத்துமுறை ஆறு புள்ளி களைப் பயன்படுத்தி, எழுத்துமுறை மற்றும் எண் முறைகளை தொடுபுலன் மூலம் அறிந்துகொள்ளும் ஒரு முறையாகும். அது மட்டுமல்ல, இதனைப் பயன்படுத்தி இசை, கணிதம் மற்றும் அறிவியல் அடையாளங் களைக்கூடத் தெரிந்துகொள்ள முடியும். பார்வையுள்ளவர்கள் அச்சிட்டப் படிவங் களைப் படிப்பதேபோன்று, பார்வையற்ற வர்களும் அவர்கள் படிக்கும் அனைத்துப் புத்தகங்களையும் இந்த பிரெய்லி எழுத்து முறை மூலம் படித்திட முடியும். பார்வை யற்றவர்கள், கல்வி, தங்கள் கருத்துக்களைக் கூறும் சுதந்திரம், மக்களுடன் சமூக செயல் பாடுகள் அனைத்திலும் பங்குகொள்ளும் திறமைக்குப் பயன்படும் மிகவும் முக்கிய மான கருவியாகும்.
லூயிஸ் பிரெய்லி 1809 இல் பிறந்த ஒரு பிரெஞ்சு கல்வியாளராவார். அவரு டைய தந்தை, குதிரைச் சேணம் தயாரிப்ப வர். லூயிஸ், சிறுவனாக இருந்த சம யத்தில், தன் தந்தையார் அவருடைய பட்ட றையில் தோலுடன் மேற்கொள்ளும் பணி யைக்கூர்ந்து கவனித்து வந்தார். ஒரு நாள், அவருக்கு மூன்று வயதாக இருக்கும்போது, அவர் பட்டறைக்குள் பது ங்கிச்சென்று, தன் தந்தை செய்வதே போன்று, தோலில் குத்தூசியால் ஓட்டை கள் போட முயற்சித்தார். அந்த சமயத்தில் தவறுதலாகக் குத்தூசி அவருடைய ஒரு கண்ணில் குத்தி, அவருக்குக் காயத்தை ஏற்படுத்தி விட்டது. இதன்தொடர்ச்சியாக அவருக்கு அடுத்த கண்ணிலும் பார்வை இழப்பு ஏற்பட்டது. அவருடைய பெற்றோர், இதர குழந்தைகள் கல்வி கற்பதைப்போல லூயிசும் கல்வி கற்பதற் கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டார் கள். ஆரம்பத்தில் உள்ளூர் பள்ளி ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் பாரிசி லிருந்த பார்வையற்ற இளைஞர் களுக்கான தேசிய நிலையத்திற்கு அனுப்பப் பட்டார். அங்கேதான் அவர் புரட்சிகரமான பிரெய்லி எழுத்துமுறையைக் கண்டு பிடித்தார்.
பிரெய்லி தினத்திற்கான தேதியை ஐக்கிய நாடுகள் மன்றம் 2018இல் தேர்வு செய்யப்பட்டது. அதன்பின்னர் 2019இ லிருந்து பிரெய்லி தினம் உலகம் முழு வதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரெய்லி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், பிரெய்லி எழுத்துமுறை யின் முக்கியத்துவத்தை பார்வையற்ற வர்களிடம் எடுத்துச்சென்று, பார்வையற்ற வர்களுக்கும், குறைந்த அளவில் பார்வை யுள்ளவர்களுக்கும் இதரர்களுக்கு இருப்பதைப்போன்று முழுமையாக மனித உரிமைகளைப் பெற்றுத்தருவதற்கான தொடர்பு வழிமுறையாகும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதேயாகும். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை, இந்த சமயத்தில் பார்வை யற்ற அனைவருக்கும் தன் வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்கிறது. உல கத்தில் இதர ஊனமுற்ற நண்பர்களுடன் இணைந்து மேலும் முன்னேற்றகரமான, மேலும் சமத்துவத்துடன் கூடிய வாழ்க்கைக்காக நடத்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக் கும் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொண்டு, அவர்களுடன் இணைந்து நிற்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். (ந.நி.)