states

சாம்பியன் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை: குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் திடீர் அறிவிப்பு

புதுதில்லி,மார்ச் 6- உலக சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் பல வெற்றிகளை பெற்றுள்ள, ஆறு முறை உலக சாம்பிய னான எம்சி மேரி கோம், நாளை தொடங்க உள்ள  ஐபிஏ எலைட் மகளிர் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சோதனைகளில் பங்கேற்கப்  போவதில்லை என்று மேரி கோம் முடிவு செய்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம், இந்தியக் குத்துச் சண்டை கூட்டமைப்புக்கு அளித்துள்ள செய்தி யில், “இளைய தலைமுறையினர் சர்வதேச  அரங்கில் தங்களுக்குப் பெயர் எடுப்ப தற்கும், பெரிய போட்டிகளின் வெளிப்பாடு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்க உலக சாம்பியன்ஷிப், ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை. நான் காமன்வெல்த் போட்டி களுக்கான பயிற்சியில் மட்டுமே கவனம்  செலுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து  இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங்  கூறுகையில், கடந்த இரண்டு தசாப்தங் களாக மேரி கோம் இந்திய குத்துச்சண்டை க்குச் சிறந்த பங்காற்றி வருகிறார். மேலும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது  முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம், மற்ற குத்துச்சண்டை வீரர் களுக்கு வழிவிடும் முடிவு, அவரது சாம்பியன் குணத்திற்குச் சான்றாகும்” என்று தெரி வித்தார்.