போபால், ஜன.24- மத்தியப் பிரதேச முன் னாள் அமைச்சரும், பாஜக தலைவருமான இமார்தி தேவி, தனக்கு வழங்கப்பட்ட முகக் கவசத்தை காரிலி ருந்தபடியே வெளியே தூக்கி வீசியது சமூக வலைத்தளங் களில் வைரலாகி உள்ளது. மத்தியப் பிரதேச மாநி லத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டா யம் ஆக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதோரிடம் கடு மையான முறையில் அபராத மும் வசூலிக்கப்பட்டு வருகி றது. சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயா ளிகளைத் தற்போது கொண் டிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட் களாக பாதிப்புகளின் எண் ணிக்கை அதிகரிக்கத் துவங் கியுள்ளது. முழு ஊரடங்கு விதிப்ப தற்கான எந்தத் திட்டமும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தா லும், மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, மத்தியப் பிரதேசத் தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத வர்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகை விரை வில் அதிகரிக்கப்படும். அவர் களுக்காக திறந்தவெளிச் சிறைகளும் அமைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தி ருந்தார்.
இந்நிலையில், போபா லில் கடந்த ஜனவரி 21 அன்று, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந் தவர்கள் முகக்கவசம் அணி யாதவர்களுக்கு முகக்கவ சங்களை விநியோகித்துள்ள னர். அப்போது, பாஜக தலை வர் இமார்தி தேவி முகக்கவ சம் அணியாமல் தனது காரில் சென்ற நிலையில், அவ ருக்கும் அவர்கள் முகக்கவ சத்தை வழங்கியுள்ளனர். தனக்கு அளிக்கப்பட்ட முகக் கவசத்தைப் பெற்றுக் கொண்ட இமார்தி தேவி, கார் கிளம்பி யவுடன் அதனை வெளியில் தூக்கி விசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளி யாகி சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. கடந்த 2 ஆண்டுகளா கவே, பாஜக தலைவர் இமார்தி தேவி கொரோனா விதிமுறைகளை பின்பற்று வதில்லை. அதுமட்டுமல்ல, கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, `நான் மாட்டுச் சாணத்தில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற் படாது’ என்றும் அவர் பர பரப்பை ஏற்படுத்தியிருந் தார்.