states

img

போயிங் 787 “ட்ரீம்லைனர்” ரக விமானங்கள் இனி பெரும் விபத்துகளில் சிக்கும்

போயிங் 787 “ட்ரீம்லைனர்” ரக விமானங்கள் இனி பெரும் விபத்துகளில் சிக்கும்

அமெரிக்க பொறியாளர் எச்சரிக்கை

இந்தியாவில் நிகழ்ந்த விமான விபத்தை போன்று வரும் காலங்களில் “போயிங் 787 ட்ரீம்லைனர்” ரக விமானங்கள் பெரும் விபத்துகளில் சிக்கும் என அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமான  உற்பத்தியில் சில குறைபாடு களை கவனித்தேன். 2 பியுஸ்லேஜ் (Fuselage) எனப்படும் விமான பாகங்க ளை இணைக்கும்போது, சரியான  இணைப்பு முறைகள் பின்பற்றப்பட வில்லை. பொருந்தாத பாகங்கள் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரி செய்தனர். ஆயிரக்கணக்கான பய ணங்களுக்குப் பின் இந்த குறைபாடு பேரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக மாசுபடிந்த குழாய்கள் விமானத்தின் ஆக்ஸிஜன் அமைப்பில் பொருத்தப் படுகின்றன. அவை முறையாக சுத்திக ரிக்கப்படாவிட்டால் பெரும் வெடி விபத்துக்கு வழிவகுக்கும். அதனால் “போயிங் 787 ட்ரீம்லைனர்” ரக விமா னங்கள் இனி பெரும் விபத்துகளில் சிக்கும்” என அவர் கூறியுள்ளார்.