states

கருப்பின இளைஞர் சுட்டுக்கொலை

கொலம்பஸ், ஜூலை 4 - அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போக்கு வரத்து விதிகளை மீறியதாக கூறி, ஜேலண்ட் வாக்கர் என்ற கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்ற  வீடியோ வெளியானது. அவரது உடலில் 60 தோட்டாக்கள் பாய்ந்ததாக கூறப்படும் நிலையில், கருப்பின மக்களை குறிவைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து ஒஹியோ மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.