லக்னோ, மார்ச் 17- உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் பதவியை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக-வின் கூட்டணி கட்சியான நிஷாத் கட்சி விவகாரத்தை ஆரம்பித்துள்ளது. யோகி ஆதித்யநாத் தான் உ.பி. முதல்வர் என்பது உறுதியாகி விட்ட நிலையில், துணை முதல்வர் பதவி யாருக்கு? என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஏற்கெனவே துணைமுதல்வராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா தோற்றுப் போன நிலையில், கூட்டணி கட்சிகளான அப்னா தள் (சோனேலால்), நிஷாத் கட்சி ஆகியவை, தங்களுக்கே துணை முதல்வர் பதவி என நெருக்கடி தர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, 15 தொகுதிகளில் போட்டியிட்டு 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் வெளிப்படையாகவே இதுபற்றி பேசியுள்ளார். ‘’இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி வெல்வதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். குறிப்பாக எங்கள் மீன வர் சமுதாயம் பாஜக-விற்காக தீவிரப் பிரச்சாரம் செய்தது. எனவே, எனது சமூ கத்தினர் என்னை உ.பி.யின் துணை முதல்வராகப் பார்க்க விரும்புகின்ற னர். தேநீர் விற்றவர் நம் நாட்டின் பிரதம ராக அமரும்போது, ஒரு மீனவர் ஏன் துணை முதல்வராகக் கூடாது?” என்று கேட்டுள்ளார். மேலும், “எங்கள் மீனவர் படை யால்தான் உத்தரப் பிரதேசத்தில் ராவ ணன் ஆட்சியை அமலாக்க முயன்ற வர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். தற்போது நாங்கள் வென்றிருக்கும் 8 தொகுதி களில், கடந்த 2017-இல் பாஜக ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்’’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.