13 மக்களவை தொகுதியை கொண்ட பஞ்சாப் மாநி லத்தில் சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட தயாரானது பாஜக. சிரோ மணி அகாலிதளத்திற்கு 8 தொகுதி யும், பாஜகவிற்கு 5 தொகுதி என கூட்டணி ஒப்பந்தம் முடிவடைய விருந்த நேரத்தில் மீண்டும் விவ சாயிகள் போராட்டம் தலைதூக்கி யது. விவசாய போராட்டத்திற்கு பிறகு சிரோமணி அகாலிதளம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அதாவது இனிமேல் பாஜகவிடம் கூட்டணி சேர்ந்தால், பஞ்சாப் மக்கள் தங்களை அடித்து துரத்தி விடுவார்கள் என சுதாரித்துக்கொண்டது. இதனால் சிரோமணி அகாலி தளம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ரகசியமாக கூட்டணி தொடர்பான பேச்சுவர்த்தையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி இல்லை என்றும், தனித்து போட்டியிடப் போவதாக சிரோமணி அகாலிதளம் கட்சி அறிவிக்க உள்ள தாக தகவல் வெளியாகியது. சிரோமணி அகாலிதளம் அறிக்கை வெளியிட்டால் அவமான ஆகிவிடும் என உணர்ந்த பாஜக முந்திக்கொண்டு செவ்வாயன்று, தனித்துப் போட்டியிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது சிரோமணி அகாலிதளம் கூட்டணியில் இருந்து வெளி யேற்றியதை மறைக்க தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று பிரச்சனையை திசை திருப்பியுள்ளது. ஏற்கனவே ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதாதளம் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று விலகிய நிலையில், தற்போது பஞ்சாப்பி லும் அதே நிலை ஏற்பட்டுள்ளதால் பாஜக கதிகலங்கி போயுள்ளது.