பல அடுக்கில் கோஷ்டி பூசல்
ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநி லங்கள் தங்களது வலுவான கட்டுப்பாட்டில் உள்ளது என பாஜக அடிக்கடி மார்தட்டிக் கொள்ளும். ஆனால் தற்பொழுது 3 மாநிலங்களிலும் பாஜகவின் நிலைமை ‘சீரியஸ்’ ஆகி யுள்ளது. குஜராத் சீட் பிரச்சனையால் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக பல்வேறு கோஷ்டிகளாக சிதறியுள்ளது. மோடிக்கு எதிரான அலை யை உணர்ந்து பாஜக தொகுதி தலைவர்கள் பலர் பாஜகவை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். ராகுல் காந்தி யாத்திரை குஜராத் மாநிலத்தில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவின் நிலைமை இவ்வாறு உள்ள நிலையில், மொத்தமுள்ள 26 தொகுதியில் பாஜக 15 தொகுதி யை தாண்டுவது சிரமம் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான்
வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங் செகாவத், மோடியின் கோஷ்டி என ராஜஸ்தானில் பாஜக 3 பிரிவுகளாக உள்ளன. முதல்வர் பதவி அளிக்காததால் வசுந்தரா ராஜே, பாஜகவின் பிரச்சாரங்களில் தலை காட்டுவதை நிறுத்திவிட்டார். கஜேந்திர சிங் செகாவத் கோஷ்டியை “பைனாகுலர்” மூலம் தேட வேண்டிய சூழல் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக உருக்குலைந்த சூழலில், காங்கிரஸ் - இடதுசாரிகள் - ஆதிவாசி கட்சி - ஆர்எல்பி ஆகிய கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணியின் மக்கள் நலன்சார்ந்த தீவிர பிரச்சாரத்திற்கு தனி ஆதரவு பெருகி வரும் நிலையில், ராஜஸ்தா னில் பாஜக என்ன செய்வது என்று புரியாமல் விழித்து வரு கிறது.
மத்தியப்பிரதேசம்
முதல்வர் பதவி அளிக்காத வருத்தத்தில் வனவாசம் மேற்கொண்டுள்ளது போன்று தலைமறைவாக உள்ள 5 முறை முதல்வராக இருந்த பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவருடைய ஆதரவாளர்களான 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அவரைப் போலவே கண்டும் காணாமல் உள்ளனர். யாரென்று தெரியாத மோகன் யாதவிற்கு முதல்வர் பதவி கொடுத்தது தொடர்பாக பாஜக பல்வேறு கோஷ்டிகளாக சிதறியுள்ளது. இதனால் மத்தி யப்பிரதேசத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு போதிய அளவிலான தொகுதிகள் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது.