மும்பை, பிப்.16- மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்க ளின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சதி வேலைகள் நடைபெற்று வருவதாக சிவசேனா மூத்த தலைவரும், அக் கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பகி ரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மும்பையில் செவ்வாயன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது: “பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க உதவிடு மாறு அழைப்பு விடுத்தனர். இல்லாவிட்டால் அதன் எதிர் விளைவு களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டினர். அதற்குப் பிறகுதான் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கு நெருக்கமான வர்களுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவோம் என்று நீங்கள் நினைத்தால், அது சாத்தியமில்லை. இதை மறைந்த பால் தாக்கரே விடம் இருந்து கற்றுக்கொண்டவர்கள் நாங்கள். மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்க சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவின் மகன் நீல் சோமையா, பிஎம்சி வங்கி (Punjab and Maharashtra Co-operative Bank) மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் வாத்வா னின் வணிகக் கூட்டாளி ஆவார். எனவே பிஎம்சி வங்கி மோசடி வழக் கில் கிரித் சோமையா மற்றும் அவரது மகன் நீல் சோமையா ஆகி யோரும் கைது செய்யப்பட வேண்டும். இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.