லக்னோ, மார்ச் 9- “தற்போதைய கருத்துக் கணிப்புகள் தற்செயலானவை அல்ல. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைப்பார் என்பது, கடவுள் கிருஷ்ணன் என் கனவில் வந்து கூறிய விஷயங்கள்தான்” என்று பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் கூறியுள்ளார். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத் துக்கணிப்புகள் கூறியிருப்பது பற்றிய பேட்டியில்தான் பாஜக எம்பி ஹர்நாத் சிங் யாதவ் இவ் வாறு கூறியுள்ளார். “தற்போது வெளியாகி உள்ள கருத்துக் கணிப்பு முடிவு கள் தற்செயலானவை அல்ல. நேற்று இரவு கடவுள் கிருஷ் ணன் என் கனவில் மீண்டும் வந்தார். அப்போது, ‘யோகி என்மீது அதிக மரியாதை வைத்துள்ளார். யோகி மட்டுமே எனது வேலையை செய்ய முடி யும். அவரே எனது உண்மை யான பக்தர். எனவே, யோகி யே ஆட்சியை அமைப்பார்’ என்று கூறினார். கடவுள் கிருஷ் ணரின் ஆசீர்வாதத்தை யாரா லும் தடுக்கவோ, மறுக்கவோ முடியாது. யோகி ஆதித்யநாத் ஆட்சியை பிடிப்பது உறுதி’’ என்று ஹர்நாத் சிங் யாதவ் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த ஜன வரி 3-ஆம் தேதியன்றும், ஹர் நாத் சிங் யாதவ் பாஜக-வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “யோகி ஆதித்யநாத்தை, தான் பிறந்த மதுராவில் போட்டியிட வைக்கும்படி கடவுள் கிருஷ் ணர் கூறினார்” என்று தெரி வித்திருந்தார்.