states

img

ஆதித்யநாத் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் மீது கடும் ஒடுக்குமுறை!

லக்னோ, ஜன.12- உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர், பட்டி யல் - பழங்குடி வகுப்பினர் கடும் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக சுவாமி பிரசாத் மவுரியா குற்றம் சாட்டி யுள்ளார். உ.பி. மாநில பாஜக அரசில், தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக இருந்துவந்த சுவாமி பிர சாத் மவுரியா, செவ்வாயன்று தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜி னாமா செய்துவிட்டு, சமாஜ்வாதி கட்சி யில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி யது. மவுரியா அமைச்சராக மட்டுமன்றி, 5 முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப் பட்டவர். உத்தரப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரிடையே, மிகவும் மதிப்புவாய்ந்தவராக கருதப் படுபவர். இந்நிலையில், அவர் தனது அமைச் சர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

மவுரியா மட்டு மன்றி, அவருடன் ஷாஜன்பூர் எம்எல்ஏ ரோஷன் லால் வர்மா, பந்தா தொகுதி எம்எல்ஏ பிரிஜேஷ் பிரஜாபதி, கான்பூர் எம்எல்ஏ பகவதி சாகர், பிதுனா தொகுதி எம்எல்ஏ வினய் சாக்யா ஆகியோரும் கட்சியிலிருந்து விலகியதால் பாஜக-வினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனிடையே, தான் பாஜகவிலி ருந்து விலகியது குறித்து செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்துள்ள மவு ரியா, “மாறுபட்ட சித்தாந்தம் இருந்தா லும், யோகி ஆதித்யநாத் அமைச்சரவை யில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி னேன். ஆனால் தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாதவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது ஆதித்யநாத் அரசு மேற்கொண்ட கடுமையான ஒடுக்கு முறை காரணமாக, நான் எனது பதவி களை ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரை சமாஜ்வாதிக்கு வர வேற்றுள்ள அகிலேஷ், “சமூக நீதிக்காக வும், சமத்துவத்துக்காகவும் போராடிய மவுரியாவை மனப்பூர்வமாக வரவேற்கி றேன். சமூக நீதியில் இனி புதிய புரட்சி ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.