states

img

‘மக்கள்தான் எஜமானர்கள்’ என நிதிஷ் குமார் கருத்து!

பாட்னா, ஏப்.18- போச்சான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முசாபிர் பஸ்வான் மறைந்ததை தொடர்ந்து அங்கு, அண்மையில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் தரப்பில் முசாபிர் பஸ்வான் மகன் அமர் பஸ்வான் நிறுத்தப்பட்டார். இவர் கடந்த மாதம்தான் விகாஷீல் இன்சான் கட்சியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார்.  ஐக்கிய ஜனதாதளத்தை உள்ளடக் கிய தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக கீதா குமார் நிறுத்  தப்பட்டார்.  இந்நிலையில், தேர்தலில் அமர் பஸ்வான் 82 ஆயிரத்து 562 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்  துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கீதா குமாருக்கு 45 ஆயிரத்து 909 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 36 ஆயிரத்து 658 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தோல்விக்கான கார ணம் குறித்து, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘மக்கள்தான் எஜ மானர்கள்’ என்று ஒற்றை வரியில் அவர் முடித்துக் கொண்டுள்ளார். அதேநேரம், “இடைத்தேர்தல் வெற்றி எங்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. மாநிலத்தில் மீண்டும் சக்திவாய்ந்த கட்சியாக ஆர்ஜேடி உரு வெடுக்கும். அடுத்ததாக தேஜஸ்வி யாதவை முதல்வராக்குவதற்காக நாங்  கள் பணியாற்றுவோம்” என்று ராஷ்டிரிய ஜனதாதளம் செய்தித் தொடர்பாளர் மிரி தியுஞ்செய் திவாரி தெரிவித்துள்ளார்.