விஜயவாடா, டிச.29- ஆந்திராவில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், மதுபானத்தின் விலையை 50 ரூபாயாக குறைப்போம் என்று அம்மாநில பாஜக தலை வர் சோமு வீரராஜு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விஜயவாடாவில் நடை பெற்ற கூட்டம் ஒன்றில் சோமு வீரராஜு பங்கேற்று உரை யாற்றியுள்ளார். அப்போது மேலும் அவர் பேசியிருப்பதா வது: ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு அதிக விலைக்கு, தரமற்ற மதுவை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. பிராண்டுகள் பெயரில் போலி ஸ்டிக்கர் ஒட்டி அதிக விலை வைத்து விற்கின்றனர். அதே சமயம், மக்களுக்கு அறிமுக மான பிராண்டுகள் விற்ப னைக்கே வருவதில்லை. ஆந்திராவில் ஆளுங் கட்சித் தலைவர்கள் பலரும் மது ஆலைகளை நடத்துகின்ற னர்.
இந்த மது ஆலைகளில் தர மற்ற மதுவே தயாரித்து விற்கப் படுகிறது. ஆந்திராவில் உள்ள ஒவ்வொருவரும் மதுவுக்காக மட்டும் மாதத்திற்கு ரூ. 12 ஆயிரம் வரை செலவிடுகின்ற னர். கடந்த சில நாட்களுக்கு முன் மாநில அரசு மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்தது. இருப்பினும் இதன் பலன்கள் மக்களை சென்றடைய வில்லை. அதிக விலைக்கே மதுபானங்கள் விற்கப்படு கின்றன. ஏழைகள் மது அருந்து வதை தடுக்க அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக அர சாங்கம் கூறுகிறது. ஆந்திராவில் ஒரு கோடி பேர் மது அருந்துகிறார்கள். அந்த ஒரு கோடி பேரும் 2024 சட்டசபைத் தேர்தலில் எங்க ளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் முதற் கட்டமாக குவார்ட்டர் அளவு மதுவை ரூ. 75-க்கு விற்போம். அரசிடம் நிதி அதிகம் இருந் தால், இந்த விலையை மேலும் குறைத்து 50 ரூபாய்க்குத் தரு வோம். இவ்வாறு சோமு வீரராஜு பேசியுள்ளார்.