states

img

அதானிக்காக பாஜக நாடாளுமன்றத்தை முடக்குகிறது

ஹோசியார்பூர், மார்ச் 24- அதானிக்கு எதிரான  நாடாளு மன்ற கூட்டுக்குழுவைத் தவிர்ப்பதற் காகவே நாடாளுமன்றத்தை பாஜக முடக்கிக்கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.  விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி யோரின் 92ஆவது நினைவுதினம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான ஹர்கிசன்சிங் சுர்ஜித் அவர்களின் 107ஆவது பிறந்த தினமான மார்ச் 23 அன்று பஞ்சாப் மாநிலம் ஹோ சியார்பூரில், மாபெரும் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தியாகிகள் பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று, அதாவது 1932 மார்ச் 23 அன்று,  இங்கேயிருந்த காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் தான் தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித், பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை அகற்றிவிட்டு, மூவர்ண கொடியை ஏற்றினார். அந்த சமயத்தில் தோழர் சுர்ஜித்திற்கு வயது 16 மட்டுமேயாகும்.   காவல் துணை ஆணையர் அலு வலகம் முழுவதும் பெருங்குழப் பம் ஏற்பட்டது. ராணுவத்தினர் சுர் ஜித்தைக் கொல்ல விரும்பினார் கள். ஆனால் காவல் துணை ஆணை யர் அவரைக் கைது செய்யும்படி கட்டளையிட்டார். சுர்ஜித் கைது செய்யப்பட்டபோது அவருடைய பெயரைக் கூறுமாறு அவர்கள் கேட்டபோது, அவர் தன்னுடைய பெயர் ‘லண்டன்டாட் சிங்’ (லண்டனை உடைப்பவன்) என்று கூறினார். தோழர் சுர்ஜித்திற்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சீத்தாராம் யெச்சூரி

பின்னர் பேரணி - பொதுக்கூட்டத் தில் சீத்தாராம் யெச்சூரி பேசிய தாவது:  தோழர் சுர்ஜித், யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கிவிட்டு, எங்கே மூவர்ணக் கொடியை ஏற்றினாரோ அங்கேயே இப்பேரணி-பொது க்கூட்டத்தை நடத்திடும் பஞ்சாப் தோழர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகி பகத்சிங், பல தலை முறைகளுக்கு உத்வேகம் ஊட்டக் கூடிய ஓர் இளைஞன். ஆயினும் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் அவரிடமிருந்து உத்வேகம் பெற  வேண்டிய ஓர் அம்சம் என்ன வென்றால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பொரு ளாதார சுதந்திரம் கிடைக்கும்வரை, நாம் பெற்ற அரசியல் சுதந்திரம் முழுமை பெறாது என்று அவர் எப்போதும் கூறி வந்ததை நாம்  நெஞ்சில் ஏந்தி செயல்பட வேண்டும் என்பதாகும்.   கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் அத் தகைய சுதந்திரத்தைப் பெற்றிடவே அல்லும் பகலும் அயராது  போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஏழைகளுக்கும் பணக்காரர் களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இந்தியக் கார்ப்பரேட்டுகளில் 1  விழுக்காட்டினர், நாட்டிலுள்ள சொத்துக்களில் 44.5 விழுக்காட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர். மோடி அர சாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட 11 லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

நாட்டிலேயே நாடாளுமன் றத்தை முடக்கும் பணியில் முதன்முறையாக ஆளும் கட்சியே ஈடுபட்டிருப்பது இப்போதுதான்.  அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு ராகுல் காந்தி யின் நேர்காணலைக் கூறிக்கொண் டிருக்கிறார்கள். உண்மையில் அது காரணம் அல்ல. அதானியின் ஊழல் களிலிருந்து நாட்டின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகத்தான், அதா னியின் ஊழல் தொடர்பாக நாடாளு மன்ற கூட்டுக் குழு விசாரணையைத் தவிர்ப்பதற்காகத்தான் பாஜகவினர் இவ்வாறு நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். மோடி அரசாங்கத்தை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.  தில்லியில் காவல்துறையினர், ‘மோடியை நீக்குவோம், நாட்டைக் காப்போம்’ (‘மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சா வோ’) என்று போஸ்டர்கள் ஒட்டிய தற்காக 200 முதல் தகவல் அறிக் கைகள் பதிவு செய்திருக்கிறார்கள். அமலாக்கத்துறையினர் பதிவு செய்த 3,500 வழக்குகளில் 23 வழக்கு கள் மட்டும்தான் விசாரணைக்காக நீதிமன்றம் சென்றிருக்கின்றன. பசுப் பாதுகாப்புக் குழுவினர் என்ற பெயரில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை காருடன் தீ வைத்துக் கொளுத்தி, கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஆர்எஸ்எஸ் பரப்பிவரும் மதவெறி நஞ்சே காரணமாகும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். (ந.நி.)