லக்னோ, ஜன.18- அசோக சக்கரவர்த்திக்கும், முக லாய பேரரசர் அவுரங்கசீப்பிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை; இருவருமே உடன்பிறந்தவர்களைக் கொன்று சிம்மாசனத்தை பிடித்த வர்கள் என்று பாஜக-வின் கலாச்சா ரப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா பிரகாஷ் சின்ஹா பேசியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தயா பிரகாஷ் சின்ஹா. பாஜகவின் கலாச்சாரப் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள இவருக்கு, மோடி அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், தயா பிரகாஷ் சின்ஹா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘அசோக சக்கரவர்த்திக்கும், முக லாய பேரரசர் அவுரங்கசீப்புக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை.
இருவரும் தங்கள் உடன் பிறந்த வர்களை கொன்று அரியணை ஏறியவர்கள். அதன் பின்னர் தாங் கள் மதிப்புக்குரியவர்கள் போன்று காட்டிக்கொள்ள இருவரும் பக்தி மான்கள் என்ற பிம்பத்தை வெளிப் படுத்தி வந்தனர்’’ என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். முஸ்லிம் என்பதால் பேரரசர் அவுரங்கசீப், எப்போதுமே பாஜக வுக்கு ஆகமாட்டார். பவுத்த மதத் தைத் தழுவியதன் மூலம் அது வரை கோலோச்சிக் கொண்டிருந்த பிராமணியத்தின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ப தால் அசோக சக்கரவர்த்தியையும் சங்-பரிவாரங்கள் ஏற்பதில்லை. இதையே பாஜக-வின் கலாச்சாரப் பிரிவு ஒருங்கிணைப்பாளரான தயா பிரகாஷ் சின்ஹா எதிரொலித்து இருந்தார். இது உ.பி., பீகார் உள்ளிட்ட மாநி லங்களில் பாஜகவுக்கு எதிராக திரும்பியதால், தயா பிரகாஷ் சின்ஹாவின் கருத்துக்கு, பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலே, முகநூலில் கண்ட னம் தெரிவித்துள்ளார். ‘‘பீகாரின் பெருமிதமாகக் கருதப்படும் அசோக சக்கரவர்த்தி குறித்து தவறான தகவலை பரப்பும் தயா பிரகாஷை பீகார் அரசு கைது செய்ய வேண்டும். அவருக்கு எதிராக விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் அவர் குற்றவாளி என்று உறுதி செய் யப்பட்ட பின்னர், குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்தை பீகார் அர சின் குழு சந்தித்து, தயா பிரகா ஷுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்’’ என்று தயா பிர காஷூக்கும், பாஜகவுக்கும் சம்பந் தமே இல்லாதது போல கருத்து தெரி வித்துள்ளார்.