ஜம்மு - காஷ்மீரிலும் பாஜக அட்டூழியம்
48 மணிநேரமாக நீடிக்கும் மத வன்முறை பதற்றம்
ஜம்மு-காஷ்மீர் ககரா சட்டமன்ற தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ வான மெஹ்ராஜ் மாலிக் வியா ழக்கிழமை அன்று சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம், “அவர்கள் (பண்டிதர்கள்) பண்டிகைகள் மற்றும் திருமணங்களின் போதும் மது அருந்துவதால் மதுபானக் கடைகளை மூட மாட்டார்கள். காரணம் அவர்கள் மது விற்கு அடிமையாகிவிட்டனர்” எனக் கூறினார். உடனே பாஜக, முஸ்லிம் மதத்தை சேர்ந்த மெஹ்ராஜ் மாலிக் எம்எல்ஏ இந்து மக்களை அவமதித்துவிட்டார் என ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகு தியில் போராட்டங்களை நடத்தியது. குறிப்பாக ஜம்முவில் பாஜக, டோக்ரா முன்னணி, சிவசேனா, விஎச்பி, பஜ்ரங் தளம் இணைந்து நடத்திய போராட்டங்க ளின் போது முஸ்லிம் மக்களுக்கு எதி ராக வெறுப்பு கோஷங்கள் எழுப்பப்பட்ட தாகவும், இதனால் ஜம்முவின் பெரும் பாலான இடங்களில் மதவன்முறை பதற்றம் நீடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.