states

img

இந்து - முஸ்லீம் இணைந்து நவராத்திரி

பிரதமர் மோடியின் தலைமை யிலான பாஜக இந்துத்துவா எனப்படும் மதவெறி பிரி வினைக் கொள்கை மூலம் நாட்டு மக்களை பிரித்து, அதனை அரசி யல் ஆதாயத்துக்காகப் பயன் படுத்தி வருகிறது.  வடமாநிலங்களில் இந்த இந்  துத்துவா வியூகம் மூலம் பாஜக  குறிப்பிடத்தக்க பலனை பெற்று  வரும் நிலையில், மதநல்லிணக் கத்தை பேணுவதால் பாஜகவின் இந்துத்துவா வியூகம் தென்னிந்  திய மாநிலங்களில் பலிக்கவில்லை. இந்நிலையில், தென்னிந்திய மக்க ளைப் போலவே வடமாநிலங்களி லும் நவராத்திரி பண்டிகையில் இந்து - முஸ்லீம் மக்களின் மதநல்லி ணக்க செயல்பாடுகள் மூலம் பாஜக வின் இந்துத்துவா நெருக்கடிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.  தியோரியா - உத்தரப்பிரதேசம் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத் தின் புஜோலி பகுதியில் நவராத்தி ரியின் கன்யா பூஜை கொண்டாட்டத்  தில் ஒரு முஸ்லீம் 1500-க்கும் மேற்  பட்ட இந்து மக்களுக்கு உணவு மற்றும் சிறுமிகளுக்கு உடை, சிறப்  புப் பரிசுகள் வழங்கி அசத்தி யுள்ளார். முக்கியமாக புஜோலி பகு தியில் இந்து - முஸ்லிம் மக்கள்  இணைந்தே நவராத்திரி பண்டிகை யைக் கொண்டாடி, ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்டனர். மும்பை, மகாராஷ்டிரா கவிழ்ப்பு முயற்சிகள் மூலம் ஆள்பிடித்து பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா மாநி லத்தின் மும்பை நகரில், நவராத்திரி கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்  வான “கர்பா” நடன கொண்டாட்டத்  தின் பொழுது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டா பாட கர்களான சலீம் மெர்ச்சன்ட், ஒஸ்மான் மிர், அமீர் மிர் ஆகி யோர் மேடையில் இசையுடன் பாடல்களை பாட அதற்கேற்ப மத பேதமின்றி மக்கள் நடனமாடினர். முன்னதாக இந்த 3 இஸ்லாமியப் பாடகர்களும் துர்க்கை அம்ம னுக்கு பூஜை செய்த பின்னர் மேடைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தண்டேவாடா, சத்தீஸ்கர் நவராத்திரி கொண்டாட்டத்தின் பொழுது சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள  மா தண்டேஷ்வரி கோவிலுக்குள் முஸ்லிம் குடும்பங்கள் சென்று  நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்துள்ளனர். இதுபோல நிறைய மதநல்லி ணக்க சம்பவங்கள் நவராத்திரி கொண்டாட்டங்களில் நிகழ்ந்துள் ளன. ஆனால் பெரும்பாலான ஊட கங்கள் திட்டமிட்டு மறைத்து வரு கின்றன.