மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீகார் மாநில 23 ஆவது மாநாடு சமஷ்டிபூரில் ஞாயிறன்று மாபெரும் பேரணியுடன் துவங்கியது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தலைநகர் பாட்னாவிலிருந்து கார் மூலமாக சமஷ்டிபூர் வந்தார். வழிநெடுகிலும் அனைத்து நகரங்களிலும் அவருக்கு தோழர்களும், விவசாயிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனொரு பகுதியாக தர்பங்கா நகரில் அளிக்கப்பட்ட வரவேற்பு.