states

வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் பெரைராவுக்கு ஜாமீன்!

புதுதில்லி, ஜூலை 28 - பீமா கோரேகான் வழக்கில், ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான அருண் பெரைரா, எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான வெர்னான் கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடைபெற்ற போரில் ‘மராத்திய பேஷ்வா படைகளை’ வெற்றிகொண்டதன் நூற்றாண்டை, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித் மக்கள் கடந்த 2018 ஜன வரி 1 அன்று விழாவாக கொண்டாடி னர். ஆனால், இந்த விழாவிற்குள் புகுந்த சாதி ஆதிக்கவெறியர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்மு றையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.  அன்றைய ஆளும் மாநில பாஜக அரசு, சாதி வெறியர்களைக் கைது செய்யாமல், இவ்விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வரவர ராவ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, பாதி ரியார் ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கோன்சால்வஸ் உள்ளிட்ட 9 மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது  தேசத்துரோக வழக்கு, சட்ட விரோத செயல்கள் தடுப்பு உட்பட பல வழக்குகளை பதிவு செய்தது. 

பீமா கோரேகான் கொண்டாட்ட த்திற்கு முதல் நாள், 2017 டிசம்பர்  31 அன்று எல்கர் பரிஷத் மாநாட்டில்,  மேற்கண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆற்றிய உரைகள் காரணமாகவே, பீமா  கோரேகானில் வன்முறை தூண்டி விடப்பட்டது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு மாவோயிஸ்டுகளின் தொடர்பு  உள்ளதாக கூறி வழக்கு தேசிய புலனாய்வு  முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணை யில் மேலும் 9 பேர் கைது செய்யப் பட்டனர். இவர்கள் பிரதமர் மோடி யை கொலை செய்வதற்கு திட்ட மிட்டதாக புதிய குற்றச்சாட்டுக் களும் புனையப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்ட வர்களில் பாதிரியார் ஸ்டான் சுவாமி ஜாமீனே கிடைக்காமல் தனது 83 வயதில் சிறையிலேயே 2021-ஆம் ஆண்டில் மரணமடைந்தார். சுதா பரத்வாஜூக்கு கடந்த 2021 டிசம்பரில் ஜாமீன் கிடைத்தது. 82 வயதான கவிஞர் வரவர ரா விற்கு 2022  ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவக் காரணங்களுக்காக 6 மாத நிபந்தனை ஜாமீன் வழங்கப் பட்டது. 70 வயதான சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா, புற்றுநோய் பரிசோதனைக்காக 2022 நவம்பரில் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, மூன்றரை ஆண்டு களாக சிறையில் இருந்த பேராசிரி யரும், டாக்டர் அம்பேத்கரின் பேரனு மான ஆனந்த் டெல்டும்டேவும் மும்பை உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அருண் பெரைரா மற்றும் வெர்னான் கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சுதன்ஷூ துலியா  அமர்வு, விசாரணை முடியும் வரை மகாராஷ்டிரா மாநிலத்தை விட்டு  வெளியேற கூடாது என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.