states

img

பள்ளி மதிய உணவில் முட்டையா? ஏற்கவே முடியாது!

பெங்களூரு, டிச.11- கர்நாடக மாநிலத்தில் ஊட்டச்சத்து குறை பாடு கண்டறியப்பட்ட பிதார், ராய்ச்சூர், கல்புர்கி, யாத்கிர், கொப்பல், பல்லாரி மற்றும் விஜயபுரா ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் வேகவைத்த முட்டைகளை வழங்கும் திட்டத்தை அம்மாநில பாஜக அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியது. இந்த மாவட்டங்களில் 14.4 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பொதுக் கல்வித்துறையும் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், “டிசம்பர் 1, 2021 முதல் மார்ச் 30, 2022 வரை, 7 மாவட்டங்க ளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 லட்சத்து 44 ஆயிரத்து 322 மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும். முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப் பழம் வழங்கப்படும்.

1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நாட்க ளில் ஒரு முட்டை அல்லது வாழைப்பழம் ஒன்றின் விலை ரூ. 6 என்ற அளவில் மாதத்தில் 12 முட்டை அல்லது வாழைப்பழங் கள் வழங்கப்படும்” என்று தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித் துறை கூறியிருந்தது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் பெருமைபட குறிப்பிட்டிருந்தன. இந்நிலையில்தான், மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கு மடாதிபதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். உடுப்பியில் உள்ள ஸ்ரீபெஜாவர் மடத் தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவா மிகள், “குழந்தைகளை முட்டை சாப்பிடுமாறு அரசு கட்டாயப்படுத்தக் கூடாது” என்று கூறி யுள்ளார். “உணவு என்பது தனிநபர்களின் விருப்பம், அதை யாரும் கட்டாயப்படுத்த முடி யாது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கென்று தனி உணவுப் பழக்கம் உள்ளது.

அர சாங்கத்தின் வேலை, குழந்தைகளை முட்டை சாப்பிடுவதற்கு கட்டாயப்படுத்துவது அல்ல!” என்றும் கொதித்துள்ளார். லிங்காயத் தர்ம மகாசபையின் தேசியத் தலைவரான லிங்காயத் மடத் தலைவர் சன்ன பசவானந்த சுவாமியும், “குழந்தைகள் ஒரே மாதிரியான ஆடைக் குறியீட்டை அணிந்து, ஒரே பாடத்திட்டத்தைப் படிக்கும் சீரான தன்மைதான் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு. அப்படியிருக்க, உணவில் ஏன், பாரபட்சம் காட்ட வேண்டும்?” என்று கேட்டுள்ளார். சமண மடத்தின் சீடர் பட்டரக சாருகீர்த்தி சுவாமி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதமே எழுதி விட்டார். “சைவ உணவை மட்டுமே உண்ணும் சிறுபான்மை சமண மக்களை அரசின் இந்த முடிவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று ‘கவலை’ப்பட்டுள் ளார். “சில குழந்தைகள் பிறப்பிலேயே சைவ உணவு உண்பவர்கள். அரசு பள்ளிகளில் அசைவ உணவு வழங்குவதால் பள்ளிகளில் நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது. முட்டை வழங்குவதற்கு பதிலாக, மாநில அரசு குழந்தைகளுக்கு பருப்பு, பாதாம், பால் மற்றும் பழங்களை வழங்கலாம்” என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். ஹுப்பள்ளி - தார்வாட் மேற்கு தொகுதி யின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட்டும் தன்பங்கிற்கு களத்தில் இறங்கியுள்ளார். “மாணவர்களை முட்டை சாப்பிட கட்டா யப்படுத்தக் கூடாது. ஊட்டச்சத்து குறை பாட்டைக் கட்டுப்படுத்த, ஊட்டச்சத்து நிறைந்த பிற உணவுகளை அரசு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.