போபால், மே 4- சிவராஜ் சிங் சவுகான் தலை மையில் பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சியின் பெயரால் கும் பல் படுகொலைகள் நடப்பது வழக் கமான ஒன்றாக மாறி விட்டது. அந்த வகையில், ம.பி. மாநிலத்தி லுள்ள சியோனி மாவட்டத்தில் பழங் குடியினர் 2 பேரை பஜ்ரங் தள் கூட் டத்தைச் சேர்ந்தவர்கள் 20 பேர் சேர்ந்து அடித்தே கொன்றுள்ளனர். குரை காவல் நிலைய எல் லைக்கு உட்பட்ட சிமாரியாவில் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2:30 மணி முதல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தங்களின் வீடுகளில் இருந்த சாகர் பகுதியைச் சேர்ந்த சம்பத் பாட்டி மற்றும் சிமாரியாவைச் சேர்ந்த தன்சா ஆகிய 2 பழங்குடி இளைஞர்களை, பசுவதையில் ஈடு பட்டதாக கூறி சுமார் 20 பேர் சேர்ந்து இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களை கும்பலாக சேர்ந்து தாக்கி குற்றுயிரும் குறையுயிரு மாக போட்டுள்ளனர். உயி ருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலை யில் வழியிலேயே இறந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்திய நிலையில், காங்கி ரஸ் கட்சியினர், சட்டமன்ற உறுப்பி னர் அர்ஜூன் சிங் ககோடியா தலை மையில் ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ் சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட னர். பஜ்ரங் தள் கும்பலைக் கைது செய்ய வேண்டும்; அந்த அமைப் பைத் தடை செய்ய வேண்டும்; கொல்லப்பட்ட பழங்குடியினரின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப் பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.