பெட்ரோல் - டீசல் விலை 120 ரூபாய் வரை உயரலாம்..
விலை உயர்வு அடிபோடும் நிர்மலா சீதாராமன் நிதி நிலைத்தன்மைக்கு சவால் எழுந்துள்ளது!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைக் குறிப் பிட்டு, நிதியமைச்சா் நிர்மலா சீதா ராமனும் அபாய ஒலி எழுப்பியுள் ளார். இது நாட்டின் நிதி ஸ்திரத் தன்மைக்கு சவாலை ஏற்படுத்தி யுள்ளதாக அவர் தெரிவித்துள் ளார். “நிதி நிலைத்தன்மை மேம் பாட்டு கவுன்சில் (எப்எஸ்டிசி) கூட் டத்தில் உக்ரைன் விவகாரம் மற் றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம் ஆகிய இரு முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தவரையில் அதன் போக்கை நிர்ணயிப்பது மிகவும் கடினமான பணியாகும். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 96 டாலரை எட்டியுள்ளது. நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு இவ்விரு முக்கிய பிரச்சனை களும் மிகப்பெரும் சவாலாக உரு வெடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
புதுதில்லி, பிப்.23- ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையானது பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளதாக எண்ணெய் பொருளாதார வல்லு நர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரை நெருங்கி யுள்ளது. திங்களன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 99.38 டால ராக உயர்ந்துள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத விலை உயர் வாகும். இதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு ‘பிரெக்சிட்’ பிரச்சனை கார ணமாக கச்சா எண்ணெய் விலை, பீப் பாய் ஒன்றுக்கு 99 டாலராக அதி கரித்தது. அதன் பிறகு தற்போது தான் கச்சா எண்ணெய் விலை மீண் டும் 99.38 டாலர்களுக்கு உயர்ந்துள் ளது. எனினும், சட்டப்பேரவைத் தேர் தல் நடைபெறுவதால், ஒன்றிய பாஜக அரசானது, பெட்ரோல் - டீசலின் சில்லரை விலையை உயர்த்தாமல் விட்டுவைத்துள்ளது. கடந்த 2021 அக்டோபர் 26 அன்று கச்சா எண்ணெய் விலை 82.74 அமெ ரிக்க டாலராக இருந்தபோதே இந்தி யாவில் பெட்ரோல் விலை லிட்ட ருக்கு அதிகபட்சமாக 110 ரூபாய் 4 காசுகளாகவும், டீசல் விலை 98 ரூபாய் 42 காசுகளாகவும் இருந்தது.
லிட்டர் 120 ரூபாயை நோக்கி அது சென்றது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, தீபாவளிக்கு முதல்நாள், 2021 நவம் பர் 3-ஆம் தேதியன்று இரவு, பெட் ரோல் - டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு மோடி அரசு ஆளானது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் விலை 10 ரூபாயும் குறைந்தது. நவம்பர் 4-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கடந்த 112 நாட்களாக ஒரேவிலையில்தான் (தமிழகத்தில் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக் கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக் கும்) விற்கப்பட்டு வருகிறது. இந்தி யன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எந்தவொரு பொதுத்துறை நிறுவனமும் விலையை உயர்த்த வில்லை. இதற்கு உ.பி., பஞ்சாப், உத்தர கண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 முக்கியமான மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறு வதே காரணம்.
இதற்கு முன்பு, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநி லங்களில் தேர்தல் நடந்தபோதும், இதேபோல பெட்ரோல் - டீசல் விலை கள் உயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிந்ததும் வழக்கம்போல உயர்த் தப்பட்டு, அக்டோபரில் ஒரு லிட்டர் பெட்ரோலை 110 ரூபாய்க்கு கொண்டு சென்றனர். எனவே, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 99 டாலர்களைத் தாண்டியுள்ள சூழ லில், மார்ச் 7-ஆம் தேதிக்குப் பிறகு நிச்சயமாக இந்தியாவில் பெட்ரோல் - டீசலின் விலை பன்மடங்கு உயர்த் தப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாத விலை யைக் காட்டிலும் கச்சா எண்ணெய் விலை சுமார் 17 டாலர்கள் (சுமார் 12 சதவிகிதம்) உயர்ந்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை- மானி யங்கள் வழங்கப்படாத பட்சத்தில்- பழையபடியே 120 ரூபாயை நோக் கிச் செல்லலாம் என்று எண்ணெய் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.