states

img

கடமையைச் செய்த அசாம் ரைபிள்ஸ் படை கைவிட்ட ராணுவத் தளபதி

இந்தியாவின் கிழக்குப் பகுதி யில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பற்றியெரியும் தீயை அணைக்க மோடியின் அரசு ஒன்றுமே செய்யவில்லை. மணிப்பூர் மாநிலத்திற்கு வெளிப் புற எதிரி என்று எவருமில்லை. ஆனால் மணிப்பூர் பாதுகாப்பு நெருக்கடியில் இருக்கும்போது மோடி காணாமல் போய்விட்டார். மணிப்பூரில் ஊடுருவல் முன்பை விட குறைந்து விட்டதால் அங்கு  ராணுவத்தின் பங்கு குறைந்து விட்டது. அசாம் ரைபிள்ஸ் ராணு வத்தின் ஒரு பிரிவு இந்திய-சீன எல்லைக்கு அனுப்பப்பட்டு விட்டது. அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப்படை மாற்றுப் பணியில் உள்ள ராணுவ அதிகாரிகளால் வழி நடத்தப்படுகிறது. அசாம் ரைபிள்ஸ் படையினர்தான் மணிப்பூர் மாநில பாதுகாப்பை பராமரிப்பதில் முக்கிய  பங்கு வகிக்கின்றனர். மே 2023இல்  மாநில பாஜக அரசின் ஆதரவுடன் மெய்டெய் பெரும்பான்மைவாத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  இதனால் அசாம் ரைபிள்ஸ் படை யினரின் நிலைமை மிகவும் ஆபத் தானதாக மாறியது. ஏனெனில், அசாம் ரைபிள்ஸ் படை, குக்கி இன  மக்களின் கிராமங்களை மெய்டெய்  வன்முறைக் கும்பல் தாக்குவதை தடுக்க முயற்சித்தது.

ஆனால் மாநில பாஜக அரசின் செயல்பாடு களால் மெய்டெய் மக்களின் வன் முறைக்கு பலியாகும் நிலைக்கு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் தள்ளப் பட்டனர். முன்னர் எப்போதும் நிகழ்ந்தி ராத அளவில் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. உள்ளூர்  காவல்துறையினர் அசாம் ரைபிள்ஸ் படையினரை நோக்கி துப்பாக்கியை திருப்பினர். அவர்  களை சுட்டு விடுவதாக அச்சுறுத்தி னர். ஆகஸ்ட் 2023இல் பாஜக  மாநில அரசு தனது காவல்துறை யினரைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாக அசாம் ரைபிள்ஸ் படையினரின் மீது கிரி மினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. அசாம் ரைபிள்ஸ் மணிப்  பூரை விட்டு வெளியேறக் கோரியது.  நிலைமையைக் கண்டறிய ராணு வத் தளபதி மணிப்பூர் வந்தார்.  ஆனால், மாநிலக் காவல்துறை யினர் அசாம் ரைபிள்ஸ் படையின ரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது குறித்து நியாயமான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். ‘மெய்டெய் பெய்பீஸ்’ எனும் மெய்டெய் தீவிரவாத பெண்கள் குழு, ராணுவத்தினரின் அடையாள அட்டைகளை சோதனையிட்டது. ராணுவம் கைது செய்திருந்த 12 மெய்டெய் தீவிரவாதிகளை பாஜக உள்ளூர் எம்எல்ஏ தலைமையில் பலவந்தமாக விடுவித்தது.அவ் வாறு விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான மொய்ராங்தெம் தம்பா, 2015 இல் சண்டெல் எனும் இடத்தில் இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவினர் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்திய தில் மூளையாகச் செயல்பட்ட நபர். இந்தத் தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயமடைந்தனர். 2017 முதல் ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சி உள்ள மணிப்பூரில் இராணு வம் தொடர்ச்சியாக இழிவுபடுத்தப்  பட்டுள்ளது. அதனுடைய செயலா ண்மைத் திறன் பலவீனப்படுத்தப்பட் டது. மாநிலத்தில் வாழும் குக்கி இனத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் களின் குடும்பங்கள் மெய்டெய் கும்பலால் தாக்கப்பட்ட போது ராணுவ தலைமை உரிய பதிலடி  கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வில்லை. ராணுவம் தங்களின் கட மையை சரிவரச் செய்தால் மோடி யின் பிம்பம் பாதிக்கப்படும் என்று ராணுவத் தலைமை மவுனம் காத்தது. ராணுவ தலைமை தனக்கு ரிய அதிகாரத்தை பயன்படுத்து வதற்கு அஞ்சியது.  பாஜக அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ராணுவ தலைமை இசைவாக இருந்தது.