ராகவ் சாதா சொல்கிறார்
புதுதில்லி, மார்ச் 10- பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று, அறு திப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், “அரவிந்த் கெஜ்ரி வால்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்” என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 90 இடங்கள் வரை பெற்று, மாபெரும் வெற்றியை ஆம் ஆத்மி கட்சி ஈட்டியுள்ளது. கடந்த முறை 77 இடங்களில் வென்றிருந்த காங்கிரசுக்கு இந்தமுறை 17 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. தில்லியைத் தொடர்ந்து, பஞ்சாப்பி லும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தி ருப்பது, அக்கட்சியின் முக்கியத் தலை வர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சாதா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறி வருகிறது. தேசிய அளவில் காங்கி ரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி இருக்கப் போகிறது. இன்றைக்கு ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஆம் ஆத்மியை, தில்லி கட்சி என்று யாரும் கூற முடியாது. 2012-இல் தான் ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 2022-இல் நாங்கள் 2 மாநிலங்களில் ஆட்சி யை பிடித்துள்ளோம்” என்று கூறியிருக் கும் ராகவ் சாதா, “அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதமர் ஆவார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.