ரூபாய் 12000 கோடி மதிப்பீட்டில், யமுனோத்திரி, கங்கோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய இந்துக்களின் நான்கு புனிதத் தலங்களை இணைக்கும் , மோசமான காலச் சூழலையும் தாக்குப்பிடிக்கும் 900 கிலோமீட்டர் சர்தார் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை மோடி அரசு துவக்கியது. இது சூழலியல் வழிகாட்டுதலுக்கு எதிராக உள்ளது என்று உச்சநீதிமன்றம் ரத்து செய்து, சர்தார் சாலை திட்டத்திற்கு தடை விதித்தது. உடனே மோடி அரசு, எப்படியேனும் அத்திட்டத்தை செயல்படுத்த முனைந்தது. ஏனெனில் அதை தமது இந்துத்துவா திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைத்து இருந்தது. எனவே, ராணுவப் படையினரை களமிறக்கியது. சர்தார் சாலைத் திட்டம் ராணு வத்திற்கு அவசியமென பாதுகாப்பு அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.தேசப் பாதுகாப்பு, இந்திய- சீன எல்லை யில் ராணுவ முகாம் ஆகியவற்றின் பின்னணியில் சாலைகள் விரி வாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளது என காரணங்களை அடுக்கியது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ராணுவத்தின் தேவை குறித்து சந்தேகிக்க முடியாது என்று கூறி, நிலவியல் ரீதியாக பலவீன மான இமாலயத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்ய அனுமதித்தது. இதற்கு முன்பு , ராணுவத் தளபதி ஒரு மீடியாவுக்கு அளித்த பேட்டியில், தற்போதுள்ள சர்தார் சாலைகளே போதுமானவை; அவைகள் விரி வாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி இருந்ததை உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. சர்தார் சாலை விரி வாக்கத் திட்டம், ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் போன்ற பிரச்சனைகளில் உச்ச நீதிமன்றம் தலையீடு செய்யத் தயங்கியது.