states

பெண் அதிகாரிகளுக்கு கர்னல் அந்தஸ்து ராணுவம் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது!

புதுதில்லி, நவ. 4 - ராணுவத்தில் நிரந்தர பணி அந்தஸ்து பெற்ற பெண் அதிகாரிக ளுக்கு கர்னல்-ஆக பதவி உயர்வு வழங்க மறுக்கும் ராணுவத்தின் அணுகுமுறை தன்னிச்சையானது என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பெண் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான சிறப்பு தேர்வு வாரியத்தை அடுத்த 15 நாள்களுக் குள் கூட்ட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. இந்திய ராணுவத்தில் ஓய்வுப் பெறும் (60 வயது) வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து (பி.சி.) பெற்ற பெண் அதிகாரிகள், ராணு வத்தின் தேர்வு நடைமுறைகளில் கர்னல் பதவிக்கு உயர்த்தப்படாமல் புறக்கணிக்கப்படுவது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.  விசாரணையின் முடிவில் தீர்ப்ப ளித்த நீதிபதிகள், “ராணுவத்தின் கொள்கை சுற்றறிக்கை, உச்ச நீதி மன்றத்தின் முந்தைய தீர்ப்புக்க ளுக்கு முரணாக இருக்கிறது. பெண் அதிகாரிகளுக்கு கர்னலாக பதவி உயர்வு அளிக்க கட்-ஆப் கணக்கீடு செயல்முறை தன்னிச்சையாக முடி வெடுக்கப்பட்டுள்ளது. பணியில் முறையான பதவி உயர்வு பெற போராடும் பெண் அதிகாரிகளுக்கு நீதியை வழங்க வேண்டிய அவசி யத்தை ராணுவத்தின் இந்த அணுகு முறை மீறியுள்ளது. பெண் அதிகாரி களுக்கு இடமளிக்க போதிய எண் ணிக்கையிலான காலியிடங்கள் இல்லை எனும் ராணுவத்தின் வாதத் தை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.  எனவே, தீர்ப்பு வெளியான 15 நாட்களுக்குள் பெண் அதிகாரிக ளுக்கு ‘கர்னல்’ பதவி உயர்வு வழங்குவதற்கு சிறப்பு தேர்வு வாரியத்தைக் கூட்ட வேண்டும். ராணுவ அதிகாரியின் ரகசிய அறிக்கை (சிஆர்) என்பது குறிப்பிட்ட அந்த அதிகாரியின் செயல் திறனை மதிப்பிட்டு, அவர்கள் மேம் படுத்த வேண்டியவை பற்றிய கருத்துக் களைக் கொண்டது ஆகும். 9 ஆண்டு கள் சேவைக்குப் பிறகு பதவி உயர்வு நடைமுறைக்காக ராணுவ அதிகாரி களின் அனைத்து ரகசிய அறிக்கைக ளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை ராணுவக் கொள்கைகள் தெளிவாக்கு கின்றன. அதன்படி, கடைசி 2 ரகசிய அறிக்கைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து அறிக்கைகளும் கவ னத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்ச்சைகளைத் தவிர்க்க, அட்டர்னி ஜெனரல் வலியுறுத்திய படி, கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கட்-ஆப் கணக்கிட வேண்டும்” என பரிந்துரைத்தனர்.