states

துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

புதுதில்லி,டிச.28- தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிர தமர் மோடியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. வெளிப்புற மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அனைத்து பணி களையும் இந்த கவுன்சில் கவனித்து வருகிறது. இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் உள்ளார்.  இந்நிலையில் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசக ராக விக்ரம் மிஸ்ரி என்பவர் நியமிக் கப்பட்டுள்ளார். சீனாவுக்கான இந்திய தூதராக 3 ஆண்டுகள் பணி யாற்றிய இவர், இந்தியாவின் வெளி யுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.  இதற்கு முன்னர் ஸ்பெயின் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றி யுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாள ராகவும் விக்ரம் மிஸ்ரி பணியாற்றி யுள்ளார்.