புதுதில்லி, ஜூலை 25- தேர்தல் பத்திரங்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்றிருப்ப தாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் இணைய தளத்தில் தக வல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பிழையைச் சரி செய்திட வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருக்கிறது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவல கம் சார்பில் புதுதில்லியில் உள்ள ஏடிஆர் (ADR-Association for Democratic Reforms) எனப்படும் ஜன நாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத் தின் (Association for Democratic Reforms), தலைவர், ஜெனரல் அனில் வர்மா (ஓய்வு)க்கு ஒரு கடிதம் ஜூலை 18 அன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: 2023 ஜூலை 11 அன்று வெளியிடப் பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையில், “நிதி யாண்டு 2016-17இலிருந்து நிதியாண்டு 2021-22 வரையிலுமான காலங்களில் பதிவுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப் பட்டுள்ள நன்கொடைகள் குறித்த ஆய்வு” என்னும் தலைப்பில் வெளி யாகியுள்ள அறிக்கையைப் பார்த்தோம். அந்த அறிக்கையில், தேர்தல் பத்தி ரங்கள் தொடர்பாக ஒரு பிழை வந்தி ருப்பதை நாங்கள் பார்க்க நேர்ந்தது. அறிக்கையில் 6ஆம் பக்கத்தில் வரை யப்பட்டுள்ள சித்திரத்தில் (graph), ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் காலக் கட்டத்தில் இந்தப் பத்திரங்களின் மூலமாக 63.75 கோடி ரூபாய் பெற்றி ருக்கிறது’ என்று காட்டுகிறது. இந்தக் கூற்று முற்றிலும் தவறானதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலமாக எவ்விதமான நன்கொடையையும் இதுவரையிலும் பெற்றிருக்கவில்லை.
பத்திரங்களுக்கு எதிராக சிபிஎம் வழக்கு
தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறி முகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அத்திட்டத்திற்கு எதிர்ப்பினை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து வந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் முன் வழக்கு தொடுத்துள்ள மூவரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று என்பது உங்களுக்கு நன்றா கவே தெரிந்திருக்கலாம். மேலும், இத்தகைய பத்திரங்களிலி ருந்து பெறப்படும் தொகையைக் காசாக்குவதற்காக எந்தவொரு வங்கி யிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணக்கு எதுவும் திறந்திடவில்லை. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் இந்த அறிக்கையானது, எங்கள் கட்சிக்கும் அதன் நற்பெய ருக்கும் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே இந்தப் பிழையை உடனடி யாக நீங்கள் சரிசெய்திட வேண்டும் என்றும், இது தொடர்பாக உங்களு டைய இணைய தளத்தில் ஓர்அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் உங்க ளைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தின் கடிதம் குறிப்பிட்டி ருக்கிறது. (ந.நி.)