states

img

ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்

ஹைதராபாத், பிப்.21-  ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி திங்களன்று காலை மாரடைப்பால் காலமானார்.  51 வயதான கவுதம் ரெட்டி நெஞ்சுவலி காரணமாக ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளார். கவுதம் ரெட்டியை பரிசோதித்த அப்பல்லோ மருத்து வர்கள், அவருக்கு வீட்டிலேயே பலத்த மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகள் செய்யப்பட்டன. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 2019ம் ஆண்டு முதல் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் தொழில் மற்றும்  தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த கவுதம் ரெட்டி, நெல்லூர் மாவட்டம் அத்மகூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத் திற்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவரது தந்தை ராஜா மோகன் ரெட்டி, நெல்லூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 4 முறை தேர்வு செய்யப்பட்டவர். துபாயில் நடைபெற்ற சர்வதேச தொழில் அமைப்பினர் மாநாட்டில் கலந்து கொண்ட கவுதம் ரெட்டி சனிக்கிழமையன்று ஹைதரா பாத் திரும்பினார்.  அவரது திடீர் மரணத்தால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அமைச்சர் கவுதம் ரெட்டி மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலை வர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.