states

நேரடி அந்நிய முதலீடு: கர்நாடகம் முதலிடம்

புதுதில்லி, ஜூலை 30- இந்தியாவில் கடந்த 2021-22 நிதியாண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,58,332 கோடி அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 76 சதவீதம் அதிகமாகும். வெளிநாடுகளில் இருந்து இந்தி யாவில் மேற்கொள்ளப்படும் முதலீடு கள் அந்நிய நேரடி முதலீடுகள் (எப்.டி.ஐ) எனப்படுகின்றன. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் இந்தியாவில் எவ்வளவு அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பது குறித்த விவரங்க ளை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழிற் துறை அமைச்சகம் வெளியிட்டு வரு கிறது. அந்த வகையில் கடந்த 2020-21- ஆம் நிதியாண்டில் ரூ.89,766 கோடி யாக இருந்த அந்நிய நேரடி முதலீடு, கடந்த 2021-22 நிதியாண்டில் முன் எப் போதும் இல்லாத அளவாக ரூ.1,58,332 கோடியாக (21.34 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய நிதி யாண்டை விட 76 சதவீதம் அதிக மாகும். 2021-22-ஆம் நிதியாண்டில் அதிக அந்நிய நேரடி அந்நிய முதலீட்டைப் பெறும் முதல் ஐந்து துறைகள்: கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் (24.60%), சேவைத் துறை (12.13%), ஆட்டோமொபைல் தொழில் (11.89%), வர்த்தகம் (7.72%) மற்றும் கட்டுமானம் (உள்கட்டமைப்பு) செயல்பாடுகள் (5.52%). 2021-22-ஆம் நிதியாண்டில் 101 நாடுகளிலிருந்து அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. 2020-21-ஆம் நிதி யாண்டில் 97 நாடுகளிலிருந்து முதலீடு கிடைத்திருந்தது. 2021-22-ஆம் நிதியாண்டில் அதிக அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் முதல் ஐந்து மாநிலங்கள்: கர்நாடகா (37.55%), மகாராஷ்டிரா (26.26 %), தில்லி (13.93%), தமிழ்நாடு (5.10%).  ஹரியானா (4.76%).