states

வேலை வாங்கித் தருவதாகக்கூறி 50 ஆயிரம் பேரை ஏமாற்றிய கும்பல்

புவனேஸ்வர், ஜன.1- உத்தரப்பிரதேசத்தில் வேலை வாங்கித்  தருவதாகக் கூறி ஒரு கும்பல் 50 ஆயிரம் பேரை ஏமாற்றியுள்ளது. இவர்களிடமிருந்து அந்த கும்பல் பல கோடி ரூபாய்களை பறித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து இந்த மோசடிக் கும்பல் செயல் பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்டவர்கள் குஜராத், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் என ஒடிசா  மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைத் தலைவர்  ஜெய் நாராயண் பங்கஜ் ஞாயி றன்று தெரிவித்தார். இந்த மோசடிக்காக 1,000க்கும் மேற்பட்ட  போலி சிம்கார்டுகள் மற்றும் 530-க்கும் மேற் பட்ட செல்போன்கள் பயன்படுத்தப்பட்டுள் ளதையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு கண்டறிந்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 6,000 பேர் ஏமாற்றப் பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல் பட்ட அலிகாரைச் சேர்ந்த ஜாபர் அஹமது (25) கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் மூன்று பேர் சேர்ந்து ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று பேரும் பொறி யாளர்கள் என்றும் இணையதள பயன்பா ட்டில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவர். இவர்களை நம்பி வந்தவர்களிடம் பதிவுக் கட்டணமாக தலா ரூ3,000 வசூலித்துள்ள னர். தொடர்ந்து, நேர்காணல், பயிற்சி என்ற  பெயரில் ஒவ்வொரும் ரூ.70 ஆயிரம் வரை இழந்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை குறிவைத்து இப்படி பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.