புதுதில்லி, பிப். 24 - கடந்த ஜனவரி 24 அன்று ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறு வனத்தின் ஆய்வறிக்கை வெளியான பின்னணியில், அதானி குழும பங்கு களின் சந்தை மதிப்பு ரூ. 11 லட்சத்து 81 ஆயி ரத்து 750 கோடி அளவிற்கு சரிந்துள்ளது. அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் மட்டும் சுமார் 6 லட்சத்து 39 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு, உலகின் 3-ஆவது பணக்காரராக இருந்தவர், 27-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால், இந்த இழப்பானது, அதானி குழுமத்திற்கு மட்டுமானதாக அல்லாமல், அதானி குழும நிறு வனங்களில் முதலீடு செய்திருந்த பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதானி குழும நிறு வனங்களில், பொதுத்துறை நிறு வனமான எல்ஐசி (LIC) ரூ. 36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சத்தை முதலீடு செய்திருந்தது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் உள்ளிட்ட அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்திருந்தது. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு, 2022 டிசம்பர் 31-ஆம் தேதி நில வரப்படி 82 ஆயிரத்து 970 கோடி ரூபாயாக உயர்வடைந்து இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 23 நிலவரப்படி அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு களின் மதிப்பு 33 ஆயிரத்து 242 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன்மூலம் அதானி நிறுவனங் களில் எல்ஐசி செய்திருந்த முதலீடுகளின் பங்கு மதிப்பு, 49 ஆயிரத்து 728 கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. இதுவரை பங்குகளின் மதிப்பில் மட்டும்தான் சரிவு ஏற்பட்டுள்ளது. அதா வது லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்றே எல்ஐசி தலைவர் எம்.ஆர். குமார் கூறிவந்தார். அதானி குழுமத்தில் எல்ஐசி செய்துள்ள முதலீடானது, எல்ஐசி-யின் ஒட்டுமொத்த முதலீடுகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது. அது உண்மை தான் என்றாலும், அதானி குழும நிறு வனங்களில் எல்ஐசி ரூ. 36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சத்தை முதலீடு செய்திருந்த நிலையில், அந்த முத லீட்டுத் தொகையிலும் சுமார் 3 ஆயிரம் கோடியை எல்ஐசி தற்போது இழந்துள்ளது.