போபால், ஜன. 15 - “இந்துக்களின் மக்கள் தொகை குறையாமல் தடுக்க வேண்டுமானால், அவர்கள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ‘உத்த ரவு’ போட்டுள்ளது. ‘இந்து இளைஞர்கள் மாநாடு’ என்ற பெயரில், விஎச்பி-யும், பஜ்ரங் தள் அமைப்பும் மத்தியப் பிரதேச மாநிலம் கந்துவா அருகே ஜிலேபி சவுக்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளன. இந்த கூட்டத்தில், விஎச்பி பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே கலந்துகொண்டு பேசியிருப்பதாவது: இந்திய நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்கள் எண் ணிக்கை குறைந்து வருகிறது. மத மாற்ற நடவடிக்கைகளும் அதி கரித்துள்ளன. இதைத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் 2 முதல் 3 குழந்தைகள் இருக்க வேண்டும். நமது மக்கள் தொகை குறைவாக இருந்தால் எதிர்காலம் பெரும் நெருக்கடியாக இருக்கும். எனவே அதிகளவில் குழந்தைகள் பிறக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் கலாச்சாரம் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பிறகும், இன்று இந்தியா இந்துப் பெரும்பான்மை நாடாக உள்ளது. இது நமது ஆன்மீக வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் நமது முன்னோர்களின் கடின மான போராட்டத்தின் விளைவாகும். இன்று சதி செய்து இந்து சமு தாயத்தை ஜாதியாக பிரிக்கும் தீய முயற்சி நடக்கிறது. பழங்குடியினர் பகுதிகளில், ‘பில்கள் இந்துக்கள் அல்ல; கோண்டுகள் இந்துக்கள் அல்ல!’ என்று பிரச்சாரம் நடக்கி றது. ஆனால், கோண்ட் மன்னர் களின் கல்வெட்டுகளில் ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகணேசாய நமஹ என பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததால்தான், நாடு முதலில் முஸ்லிம்களிடமும், பின் ஆங்கி லேயர்களிடமும் அடிமைப்பட்டது. ஆங்கிலேயர் வருவதற்கு முன், நம் நாடு கல்வியறிவில் சிறந்து விளங் கியது. இதை சீரழிக்கும் நோக்கில் தான் ‘மெக்காலே’ கல்வித் திட்டத்தை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். இதன் வாயி லாக நம் முன்னோர்களை அறி வில்லாதவர்கள், ஒன்றும் தெரி யாதவர்கள் என நம்மிடம் ஆங்கி லேயர்கள் போதித்தனர். அந்த மெக்காலே கல்வித் திட்டத்தைத் தான், ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கை மாற்றியமைக்க இருக்கிறது. இவ்வாறு பராண்டே பேசி யுள்ளார்.