states

விமானப்படை விமானம் விபத்து: விங் கமாண்டர் பலி

புதுதில்லி, டிச.25- இராஜஸ்தானின் ஜெய்சால்மரில், விமானப் படைக்கு சொந்தமான, ‘மிக் - 21’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், ‘விங் கமாண்டர்’ ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார். இராஜஸ்தானின் ஜெய் சால்மரில், இந்திய-பாகிஸ் தான் எல்லைக்கு அருகில் உள்ள சுதாசிரி கிராமத்தில் நமது விமானப் படைக்கு சொந்தமான மிக் - 21 ரக போர் விமானம் வெள்ளிக் கிழமை மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, பாலைவன தேசிய பூங்கா பகுதியில் இரவு 8:30 மணி யளவில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தை இயக்கிய பைலட் விங் கமாண்டர் ஹர் ஷித் சின்ஹா சம்பவ இடத்தி லேயே பலியானார். இந்த தக வலை விமானப் படை உறுதி செய்தது. விபத்துக்கான கார ணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள் ளது. விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹாவின் குடும்பத்தின ருக்கு இராஜஸ்தான் முதல் வர் அசோக் கெலாட் இரங் கல் தெரிவித்துள்ளார்.